சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக 10-ம் ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழாகோவில்பட்டி முத்தையாமல் தெருவில் நடைபெற்றது.
நற்பணி இயக்க தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் கலந்துகொண்டார்.
இந்திய உலக அமைதிக்காக 1000 ஸ்தோத்திர பலி எழுதிய மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கி,பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றியசெயலாளர் பொன்ராஜ்,நகர நிர்வாகிகள் தங்கப்பாண்டி,தவசி பாலு,மதிமுத்து முத்துக்குமார், முத்துப்பாண்டி, கணேசமூர்த்தி மற்றும் நற்பணி இயக்க நண்பர்கள் முருகேசபாண்டியன், சேகர்ஆகியோர் கலந்து கொண்டனர்.
