99 வது பிறந்தநாள்: வாஜ்பாய் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 99 -வது நிரந்தரம் இன்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி பாஜக மாவட்ட அலுவலகத்தில் வாஜ்பாய் செயல்பாடுகளை நினைவூட்டும் விதமாக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல் ராஜா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பாலமுருகேசன், பொருளாளர் கே கே ஆர் கணேசன், தொழில்பிரிவுமாவட்ட தலைவர் மாரியப்பன் உள்ளிடட பலர் கலந்து கொண்டனர்.
இந்த தகவலை ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து தெரிவித்தார்.
