தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சில பகுதிகளில் குடியிருப்பின் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக மிகக்கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.6000 நிவாரணத் தொகை, 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். மேலும் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்படும் […]
பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தும், இன்றைக்கும் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் ஆடவல்லான் ஆன நடராஜர் உத்தரகோச மங்கை மங்கள நாதசுவாமி கோவிலில் திருநடனம் புரிந்து வருகிறார். உத்தரகோசமங்கையில் இந்த மரகத நடராஜர் சிலை உருவானதே எதிர்பாராத நிகழ்வாகும். ராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற மீனவ கிராமப்பகுதி இருந்தது. அங்கு மரைக்காயர் என்ற மீனவர் வறுமையில் வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் மிகுந்த நம்பிக்கையுடன் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமியை அன்றாடம் வழிபட்டு வந்தார். தினந்தோறும் பாய்மரப் படகில் கடலுக்கு சென்று […]
வைணவக் கோவில்களில் நடைபெறும் ஒருவகை நடனம் அரையர் சேவை. இது எல்லா வைணவ கோவில்களிலும் இருந்திருக்க வேண்டும்.ஆனால், தற்போது ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊர்களில் மட்டும் நடைபெறுகிறது. நாலாயிர திவ்யப் பிரபந்த பாடல்களை இசையோடு பாடி, அபிநயம் பிடித்து விளக்கம் சொல்லும் ஆட்டம் இது. இதனை இயல், இசை, நாடகம் ஆகியன கலந்த ஆட்டம் என்று கூறுவர். நாலாயிர திவ்யப் பிரபந்த ஏடுகளை மிகுந்த சிரமத்தின் பேரில் கண்டெடுத்தவர் நாதமுனிகள் என்ற வைணவப் பெரியார். திருமங்கை […]
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். சினிமாவில் பல்வேறு சாதனைகள் புரிந்து மக்கள் மனம் கவர்ந்தவர். அவருக்கு சினிமா ரசிகர்கள் அதிகம் உண்டு. தென் இந்திய நடிகர் சங்க தலைவராக இருந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். சினிமாவில் நடித்து கொண்டு இருந்தபோதே அரசியலில் நுழைந்தார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். அரசியலில் அவரது வெற்றி நீடிக்கவில்லை. உடல்நலகுறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை […]
,மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் பார்வைக்காக இன்று காலை சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபட்டது. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். காலையில் திரை உலகினர் விஜய்காந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அந்த சமயத்தில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைசசர் ரகுபதி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் விஜயகாந்த் உடலுக்கு […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை மரணம் அடைந்தார். சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த விஜயகாந்த் மரணம் அடைந்ததை தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. விஜயகாந்த் உடலை கண்ணாடி பேழையில் வைத்து அவருக்கு வெட்டி, சட்டை, கண்ணாடி அணிவித்து உடல் மீது தேமுதிக கட்சி கொடி போர்த்தப்பட்டது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரை உலகினர் பலர் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதை தொடர்ந்து […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 30,31,1-ந்தேதிகளில் மழை: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள வானிலை அறிவிப்பின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 30, 31- மற்றும் ஜனவரி 1 ஆகிய 3 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த அதீத கனமழை காரணமாக தாமிரபரணி ஆறு மற்றும் நீர் நிலைகளில் அதிக நீர் உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு […]
கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சாலை அமைக்க கோரி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அமைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட தொடங்கினர். பாலத்தின் இருவரமும் அகற்ற வேண்டிய 90 ஆக்கிரமிப்புகளில் 57 ஆக்கிரமிப்புகள் ஏற்கனவே துறை மூலம் அல்லது பட்டாதாரர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றி விட்டனர். மீதமுள்ள 33 ஆக்கிரமிப்புகளில் 13 ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்த […]
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இன்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்று மாலை விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் டி ஜெயக்குமார் சென்று இருந்தார். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை சில நேரம் […]