கோவில்பட்டி கோட்டம் ,மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின்விநியோகம் வழங்குவதற்கு ஏதுவாக 11 கிலோவாட் பீங்கான் இன்சுலேட்டரை அகற்றி விட்டு புதிய பாலிமர் இன்சுலேட்டர் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் கோவில்பட்டி உப மின்நிலையத்தின் நகர் மேற்கு மற்றும் தெற்கு பிரிவிற்கு உட்பட்ட கத்ரேசன் கோவில் ரோடு உயர் அழுத்த மின் தொடர் மூலம் மின் விநியோகம் செய்யப்படும் கிருஷ்ணா நகர், நிலா நகர், குடிசை மாற்று […]
கோவில்பட்டியில் உள்ள வ உ சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்து இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் 6 முதல் 12 வரை 1000 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர், இப்பள்ளியில் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர், பொன்னூஷ் இயற்கை விவசாய மருந்துகள் மற்றும் உரம் தயாரித்து வரும் பொன்னுச்சாமி பரஞ்சோதி. இவர் தான் பயின்ற வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்த நிதியிலிருந்து ரூ. 5 […]
கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயிலும் மாணவர்கள் 51 பேருக்கும் மாணவிகள் 57 பேருக்கும் ஆக மொத்தம் 108 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. .பள்ளியின் தாளாளர் அருட்திரு சார்லஸ் அடிகளார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் அலெக்க்ஷான் வரவேற்புரையாற்றினார். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில். 35 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏஞ்சலா […]
.தூத்துக்குடியை அடுத்த சங்கரப்பேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படுகிறது. இதற்கான இடத்தை , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முதன்மை செயலாளர் பி.அமுதா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு கதிர்வேல் நகரை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மனைவி அம்பிகா (வயது 37). இவர், பசுவந்தனை ரோட்டில் ஜவுளி மற்றும் செருப்பு கடை நடத்தி வருகிறார். . நேற்று ஜவுளிக்கடைக்கு துணி எடுப்பது போல் வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், திடீரென்று அம்பிகாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட அவர், நகையை பறிக்க விடாமல் தடுத்து ‘திருடன், திருடன்’ என்று கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் […]
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 9-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. தென்காசி மாவட்ட நிர்வாகம்,மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றன, இந்த முகாம் 9-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. முகாமின் சிறப்பு அம்சங்கள் *100க்கும் […]
கோவில்பட்டி முத்துநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 42)) . இவர் நாரைக்கிணறு போலீஸ் எல்லைக்குட்பட்ட என்.புதூர் பகுதியை சேர்ந்த உறவினர் தமிழ்செல்வன் என்பவரது மனைவி உலகாண்ட ஈஸ்வரி வீட்டில் பரிகார பூஜை நடத்தினார். அப்போது உலகாண்ட ஈஸ்வரியின் 6½ பவுன் தங்க நகைகளை துணியால் மூடப்பட்ட ஒரு பாத்திரத்தில் வைக்க சொல்லி அவருக்கு தெரியாமல் அந்த நகைகளை எடுத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் ஒரு கல்லை வைத்து விட்டு பரிகார நாட்கள் முடியும் வரை பாத்திரத்தை திறக்க […]
கோவில்பட்டி கணேஷ்நகரை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 62). மதுரையில் ஓட்டல் வைத்திருந்தார். இவரது மனைவி அருள்மணி. இவர்களது மகன் கார்த்திக் (40). இவர் தேனியில் மனைவி மற்றும் மகனுடன் தங்கி தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கோவில்பட்டி கணேஷ்நகரில் உள்ள வீட்டில் சந்திரமோகன், அவரது மனைவி அருள்மணி மட்டும் குடியிருந்து வருகின்றனர். கடந்த 27ம்தேதி மகனை பார்ப்பதற்காக சந்திரமோகனும், அவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு தேனிக்கு சென்றனர். வீட்டு வளாகத்தில் உள்ள செடிகளுக்கு […]
தூத்துக்குடி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழிகாட்டுதலின் படி, தூத்துக்குடி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் எஸ்.பொற்செல்வன், கோவில்பட்டி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் .குணசேகரன் ஆகியோர் மேற்பார்வையில், மாவட்டத்தில் 12 வட்டாரங்கள், தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டினம் ,; திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 12 வட்டாரங்கள், தூத்துக்குடி மாநகராட்சி, […]
தூத்துக்குடி பண்டாரம்பட்டி மேலதெருவை சேர்ந்தவர் ஆத்திமுத்து மகன் நந்தகுமார் (வயது 30), பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை 11 மணியளவில் வழக்கம்போல் பால் வியாபாரத்தை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மீள விட்டான் ரோடு, பண்டாரம்பட்டி விலக்கு ரோட்டில் வந்தபோது 5 பேர் சேர்ந்து அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத நந்தகுமார், தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு வெட்டுக்காயங்களுடன் ஓட்டம்பிடித்தார்.. ஆனாலும் […]