தென்காசியில் 9 -ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 9-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
தென்காசி மாவட்ட நிர்வாகம்,மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றன,
இந்த முகாம் 9-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது.
முகாமின் சிறப்பு அம்சங்கள்
*100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
*.5ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்.
*இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்
*அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள்.
*சுயதொழில் முனைவோருக்கான கடனுதவி திட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பும் உள்ளவர்கள் Google link-இல் https://bit.ly/2ndjobfair அல்லது QR CODE ஐ ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
தனியார் துறை வேலைவாய்ப்புகள் குறித்து தொடர்ந்து அறிந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.