• May 20, 2024

தென்காசியில் 9 -ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

 தென்காசியில் 9 -ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 9-ந்தேதி  (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட நிர்வாகம்,மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையம் , தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றன,

இந்த முகாம் 9-ந்தேதி  காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது.

முகாமின் சிறப்பு அம்சங்கள்

*100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்

*.5ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்.

*இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்

*அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள்.

*சுயதொழில் முனைவோருக்கான கடனுதவி திட்டங்கள் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பும் உள்ளவர்கள் Google link-இல் https://bit.ly/2ndjobfair அல்லது QR CODE ஐ ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

தனியார் துறை வேலைவாய்ப்புகள் குறித்து தொடர்ந்து அறிந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *