ஜவுளிக்கடைக்குள் புகுந்து பெண் உரிமையாளரிடம் நகை பறிக்க முயன்றவருக்கு தர்மஅடி
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு கதிர்வேல் நகரை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மனைவி அம்பிகா (வயது 37). இவர், பசுவந்தனை ரோட்டில் ஜவுளி மற்றும் செருப்பு கடை நடத்தி வருகிறார்.
. நேற்று ஜவுளிக்கடைக்கு துணி எடுப்பது போல் வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், திடீரென்று அம்பிகாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட அவர், நகையை பறிக்க விடாமல் தடுத்து ‘திருடன், திருடன்’ என்று கூச்சலிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்,பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்றதனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி அண்ணாநகர் 12வது தெருவை சேர்ந்த முருகானந்தம் (50) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.