தூத்துக்குடி சங்கரப்பேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைகிறது

.தூத்துக்குடியை அடுத்த சங்கரப்பேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படுகிறது. இதற்கான இடத்தை , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முதன்மை செயலாளர் பி.அமுதா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
