• June 7, 2025

108 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

 108 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயிலும் மாணவர்கள் 51 பேருக்கும் மாணவிகள் 57 பேருக்கும் ஆக மொத்தம் 108 பேருக்கு  தமிழக அரசின்  விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

.பள்ளியின் தாளாளர் அருட்திரு சார்லஸ் அடிகளார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் அலெக்க்ஷான் வரவேற்புரையாற்றினார்.  கோவில்பட்டி நகர்மன்ற தலைவர்  கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில். 35  வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏஞ்சலா சின்னத்துரை,12 வது வார்டு உறுப்பினர் உமாமகேஸ்வரி பெருமாள் உள்பட பலர்  கலந்து கொண்டனர் பட்டதாரி ஆசிரியர் இருதயராஜா நன்றி கூறினார் விழாவிற்கு வருகை தந்தவர்களை சாரணர் இயக்க மாணவர்கள் மரியாதை செலுத்தி வரவேற்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *