கோவில்பட்டி வ. உ. சி. அரசு ஆண்கள் பள்ளிக்கு ரூ.5 1/2 லட்சம் மேஜை, நாற்காலிகள் வழங்கிய முன்னாள் மாணவர்

கோவில்பட்டியில் உள்ள வ உ சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்து இயங்கி வருகிறது
இந்தப் பள்ளியில் 6 முதல் 12 வரை 1000 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர்,
இப்பள்ளியில் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர், பொன்னூஷ் இயற்கை விவசாய மருந்துகள் மற்றும் உரம் தயாரித்து வரும் பொன்னுச்சாமி பரஞ்சோதி. இவர் தான் பயின்ற வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்த நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 75 ஜோடி மேஜை,நாற்காலி களை பள்ளிக்கு வழங்கினார்.


இதனை பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றுக்கொண்டனர் நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் சுப்புராம்,கணேசன், திரளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
