• June 7, 2025

கோவில்பட்டியில் 5,6-ந் தேதிகளில் மின்சப்ளை நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

 கோவில்பட்டியில் 5,6-ந் தேதிகளில் மின்சப்ளை நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

கோவில்பட்டி கோட்டம் ,மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின்விநியோகம்  வழங்குவதற்கு ஏதுவாக 11 கிலோவாட்  பீங்கான் இன்சுலேட்டரை அகற்றி விட்டு புதிய பாலிமர் இன்சுலேட்டர் மாற்றும் பணி நடைபெற உள்ளது.

இதனால் கோவில்பட்டி உப மின்நிலையத்தின் நகர் மேற்கு மற்றும் தெற்கு பிரிவிற்கு  உட்பட்ட கத்ரேசன் கோவில் ரோடு உயர் அழுத்த மின் தொடர் மூலம் மின் விநியோகம் செய்யப்படும் கிருஷ்ணா நகர், நிலா நகர், குடிசை மாற்று வாரியம், கதிரேசன் கோவில் மலை, கதிரேசன் கோவில் ரோடு, வீரவாஞ்சி நகர், வெங்கடேஷ் நகர், அசோக் நகர் ஆகிய பகுதிகளுக்கு 5 -ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  மின் விநியோகம் இருக்காது.

மேலும் வேலாயுதபுரம் பிரிவிற்கு உட்பட்ட  மார்க்கெட் ரோடு உயரழுத்த மின்தொடர் மூலம் மின் விநியோகம் செய்யப்படும் காந்தி நகர், திலகர் நகர்,கிருஷ்ணன் கோவில் பகுதி, சரமாரியம்மன் கோவில் தெரு, மார்க்கெட் பகுதி,மற்றும் நகர் கிழக்கு பிரிவிற்கு உட்பட்ட மார்க்கெட் ரோடு, செக்கடித்தெரு, கடலைக்கார தெரு, ஊரணி தெரு, தெற்கு பஜார் ஆகிய பகுதிகளுக்கு 6 -ந்தேதி  புதன்கிழமை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

குறிப்பட்ட மின்தடை நேரத்தில் பணியாளர்கள் பணி  மேற்கொள்ளும் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மதியம் 2 மணிக்குள் மின் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும். மேலும் மின்தடை ஏற்படும் மின் இணைப்புக்களை உர்ஜா மித்ரா போர்ட்டலில்  பதிவேற்றம் செய்யவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *