• June 7, 2025

‘மிக்ஜம்’ புயல் காரணமாக விடிய விடிய மழை; சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது

 ‘மிக்ஜம்’ புயல் காரணமாக விடிய விடிய மழை; சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது.

‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 130 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 13 மணி நேரமாக பெய்யும் மழையினால்  சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

மிக கனமழை பெய்தததால் பல இடங்களில் மரங்கள், கிளைகள் சரிந்து விழுந்தன. பழவேற்காடு பகுதியில் மழைநீரில் சிக்கயவர்களை படகுகள் மூலம் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டனர்.
சென்னையில் கிண்டி, வேளச்சேரி, வேளச்சேரி, துரைப்பாக்கம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், நாவலூர், பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அரும்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகம்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம்
ஒரு தொழிற்சாலைக்குள் புகுந்த மழைவெள்ளம்
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் வெள்ளம்

தொடர் கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையில் அதிகாலை வரை சராசரியாக 34 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகனமழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடைவிடாது பெய்யும் கனமழையால் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஒன்றன் பின் ஒன்றாக வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு குவியலாக ஒரு இடத்தில் தங்கி நின்றன.

அதைபோல சென்னை குன்றத்தூரில் அருகில் உள்ள வட்டக்குப்பட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்ட கார்கள் வரிசையாக வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. மொத்தத்தில் கன மழை காரணமாக சென்னை நகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது;.

இந்த நிலையில், சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், புறப்பட வேண்டிய மற்றும் தரையிறங்க வேண்டிய 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், 20 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் வீடியோ

\

பள்ளிகரணை
Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *