கோவில்பட்டி அருகே குமாரபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22 குழந்தைகள் பயின்று வருகின்றனர். குமராபுரத்தை சேர்ந்த ஒரு மாணவியும், நடு குமாரபுரம் மற்றும் வடக்கு குமாரபுரம் பகுதியை சேர்ந்த 21 குழந்தைகள் என 22 பேர் பயின்று வருகின்றனர். கடந்த 9-ம் தேதி மழையின் காரணமாக பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். குமராபுரம் பள்ளியில் நடு குமாரபுரம் மற்றும் குமாரபுரம் காலணியைச் சேர்ந்த குழந்தைகள் தான் […]
கோவில்பட்டியில் உள்ள நோய் தடுப்பு பொது சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தவர் நாகரத்தினம் (வயது 47). புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர் கோவில்பட்டியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நாகரத்தினம் தனது இரு சக்கர வாகனத்தில் ரெயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த அரசு பஸ், நாகரத்தினம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நாகரத்தினம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி […]
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் காலை வரை தொடர்ந்து கன மழை பெய்தது. கழுகுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை(87மி. மீ.)காரணமாக மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மொத்தம் 5000 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட ஆலம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜ்-சுலோச்சனா தம்பதி மகன் அருண் பாரதி (20). அய்யனார் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் அருகே அருண் பாரதியை மர்ம நபர்கள் சிலர் அறிவாளால் சரமாரியாக வெட்டினர்கள். இதில் பலத்த காயம் அடைந்த அருண் பாரதி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இந்த கொலையை தொடர்ந்து மர்ம நபர்கள் தப்பி ஓடி விடடனர். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று […]
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று (23.11.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. .தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞர் கண்ணன், விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ரேவதி, சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ராஜாமோகன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா […]
சென்னை பூந்தம்மல்லி அருகே கங்குவா தமிழ் சினிமா படப்பிடிப்பில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். சண்டை காட்சியில் நடிக்கும் போது எதிர்பாராதவிதமாக கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்து விட்டது. இதில் காயமடைந்த சூர்யா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சையை தொடர்ந்தார்கள். இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
திண்டுக்கல் தரகு மண்டி மஹாலில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க வந்த த.மா.கா. தலைவர் ஜி கே வாசன் நிருபர்களை சந்தித்து பேசுகையில் கூறியதாவது:-எதிரிகளை வீழ்த்த முக்கியமான கட்சிகளுடன் கூட்டணி அமைய வேண்டும். ஆனால் இந்தியா கூட்டணி என்பது முரண்பாடான கட்சிகள் அமைத்த கூட்டணியாக உள்ளது. பல மாநிலங்களில் அந்த கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்திய அளவில் பா.ஜ.க.வும் தமிழக அளவில் அ.தி.மு.க.வும் மிகப்பெரிய கட்சியாக உள்ளது, பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. […]
தமிழ் திரையுலகில் 1990 காலக்கட்டத்தில் கவர்ச்சியிலும், நகைச்சுவையிலும் பிரபல நடிகையாக திகழ்ந்தவர், விசித்ரா. தற்போது தனியார் டெலிவிஷலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இல் கலந்து கொண்டுள்ளார். 50 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் ஒரு விவாத நிகழ்ச்சியில் சினிமாவில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை விசித்ரா பகிர்ந்தார்.. அவர் கூறியதாவது:- ஒருமுறை முன்னணி தெலுங்கு நடிகர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். கேரளாவில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நான் தங்கியிருந்த அறைக்கு வந்த ஹீரோ, […]
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டம் அயன்கரிசல்குளம் மஜ்ரா மாவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி (வயது 42) என்பவர் 20.11.2023 இரவு பந்தல்குடி அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து, மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து கிருஷ்ணசாமியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இதற்கான அனுமதியை விவசாயி குடும்பத்தினர் வழங்கினர். தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் […]
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ந் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ந் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் […]