கோவில்பட்டியில் விபத்து: அரசு ஊழியர் பலி
கோவில்பட்டியில் உள்ள நோய் தடுப்பு பொது சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தவர் நாகரத்தினம் (வயது 47). புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர் கோவில்பட்டியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், நாகரத்தினம் தனது இரு சக்கர வாகனத்தில் ரெயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த அரசு பஸ், நாகரத்தினம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நாகரத்தினம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து பஸ் டிரைவர் , சம்பவ இடத்தில் நிறுத்தாமல் கிழக்கு காவல் நிலையத்திற்கு ஓட்டிச்சென்று போல்லீசில் தகவல் சொல்லி சரணடைந்து விட்டார். உடனடியாக கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகரத்தினம் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்