கழுகுமலை பகுதியில் கன மழைக்கு மக்காசோள பயிர்கள் நாசம்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் காலை வரை தொடர்ந்து கன மழை பெய்தது. கழுகுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை(87மி. மீ.)காரணமாக மக்காச்சோள பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மொத்தம் 5000 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்துள்ளன.
இதனால் விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.