• May 20, 2024

கோவில்பட்டி அருகே வாலிபர் வெட்டிக்கொலை 

 கோவில்பட்டி அருகே வாலிபர் வெட்டிக்கொலை 

கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட ஆலம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜ்-சுலோச்சனா தம்பதி மகன் அருண் பாரதி (20).

அய்யனார் மற்றும் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் அருகே அருண் பாரதியை மர்ம நபர்கள் சிலர் அறிவாளால் சரமாரியாக வெட்டினர்கள்.

இதில் பலத்த காயம் அடைந்த அருண் பாரதி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இந்த கொலையை தொடர்ந்து மர்ம நபர்கள் தப்பி ஓடி விடடனர். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.மேலும்  கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *