• May 20, 2024

போதைபொருள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் ஆய்வு கூட்டத்தில் முடிவு

 போதைபொருள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் ஆய்வு கூட்டத்தில் முடிவு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று (23.11.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  தலைமையில் நடைபெற்றது.

.தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர்  முத்துலெட்சுமி, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞர்  கண்ணன், விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர்  ரேவதி, சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர்  ராஜாமோகன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்,

மேலும் போலீஸ் தரப்பில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  உன்னி கிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி உட்கோட்டம்  சத்தியராஜ், தூத்துக்குடி ஊரக உட்கோட்டம்  சுரேஷ், திருச்செந்தூர்  வசந்தராஜ்,  ஸ்ரீவைகுண்டம்  மாயவன், மணியாச்சி  லோகேஸ்வரன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு  சிவசுப்பு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு  ஜெயராஜ், ஆயுதப்படை  புருஷோத்தமன் உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை , நிலுவையில் உள்ள வழக்குகள் , கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது , பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் , நீதிமன்ற அலுவல்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆய்வு நடைபெற்றது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *