Month: October 2023

கோவில்பட்டி

கோவில்பட்டியில் உலக போலியோ தினம்

உலகை அச்சுறுத்திய போலியோ நோய்க்கு முதலில் தடுப்புமருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்க்கை கவுரவிக்கும் விதமாக அக்டோபர் 24-ந்த்தேதி (இன்று) உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி என்லைட் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் நடந்த உலக போலியோ தின நிகழ்ச்சியில் போட்டித் தேர்வு மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து கிடைப்பதை உறுதிசெய்திடவும், போலியோ இல்லாத உலகத்தை உருவாக்கிடவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் குழந்தைகளை அரிசியில் `அ’ எழுத வைக்கும் சடங்கு  

நாடு முழுவதும் விஜயதசமி இன்று  கொண்டாடப்பட்டது. விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளின் சுட்டு விரலைப்பிடித்து, தட்டில் பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பார்கள். இதே போல் கோவில்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறும். கடவுள் சன்னதியில் தாயின் மடியில் குழந்தையை அமர வைத்து முன்புறம் வாழை இலை விரித்து அரிசி பரப்பி  `அ’ என்று எழுத வைப்பார்கள். […]

கோவில்பட்டி

ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சரஸ்வதி பூஜை

 கோவில்பட்டி அடுத்த ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள வன்னி விநாயகர் கோவிலில் இன்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  விநாயகருக்கு அருகில் சிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி காட்சி அளித்தார். கோவில் குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கி.ராஜநாராயணன் சிலைக்கு ஆட்சியர்  மரியாதை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்றுள்ள லட்சுமிபதி முதன் முறையாக இன்று கோவில்பட்டிக்கு வருகை தந்தார்.  கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா. நினைவரங்கத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் வளாகத்தில் உள்ள கி.ராஜநாராயணன்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது கோவில்பட்டி தாசில்தார் லெனின் உடனிருந்தார்.

கோவில்பட்டி

நவராத்திரி விழா: சரஸ்வதி அலங்காரத்தில் முத்துமாரியம்மன்

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 15 ம் தேதி நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்றது. தினமும் காலை வெற்றி விநாயகர் முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து கொலு மண்டபத்தில் முதல் 3 நாட்கள் துர்கா பூஜை அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமி பூஜை கடைசி 3 நாட்கள் சரஸ்வதிபூஜை நடைபெற்றது. நவராத்திரி நிறைவு நாளான இன்று  நடைபெற்ற சரஸ்வதி  பூஜையில் முத்துமாரியம்மன் சரஸ்வதி கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு […]

கோவில்பட்டி

பனை தொழிலில் பார்வையற்ற முதியவர்; அண்ணாமலை வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்த பொன்பாண்டி என்ற பார்வை திறனற்ற முதியவர் பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார், இவருக்கு பிறவியில் இருந்தே கண் பார்வை தெரியாது. இருந்தும் அதை குறையாக கொள்ளாமல் 50 ஆண்டுகளாக இந்த பனை தொழிலை செய்து வருகிறார்.  தனி ஒரு ஆளாக யாருடைய உதவியும் இன்று தினமும் 20 லிருந்து 30 பனை மரங்களில் ஏறி இறங்குகிறார். பதநீர் இறக்குவது, கருப்பட்டி தயார் செய்வது, ஓலை விற்பனை செய்வது என தனது […]

ஆன்மிகம்

கனவும்-பலன்களும்….

*.கனவில் கோவிலை கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும். *கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வருமேயானால், சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு கஷ்டபடுவீர்கள். *ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவுகள் சாத்தப்பட்டது போல் கனவு வந்தால் நாம் செய்து வரும் தொழிலில் பிரச்சனை ஏற்பட போகிறது *கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போல் கனவு வந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

துாத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள  சட்டமன்ற உறுப்பினர்  கடம்பூர் செ. ராஜூ இல்லத்தில் நடைபெற்றது. மாநில அ.தி.மு.க., எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளரும், துாத்துக்குடி வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான காஞ்சி பன்னீர் செல்வம்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ எம்.எல்.ஏ., பேசும்போது, ‘துாத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் செப்., 13ம் தேதி […]

கோவில்பட்டி

உமறுப்புலவர் நினைவிடத்தில் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை

சீறாப்புராணம் அமுதகவி உமறுப்புலவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, எட்டயபுரம் மணிமண்டபத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில்  அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.,அவரை தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் .மார்கண்டேயன், ,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் .லட்சுமிபதி ஆகியோர் மரியாதை செலுத்தினர் இந்த .நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன்கிறிஸ்டிபாய், உமறுப்புலவரின் வாரிசுதாரர் காஜாமைதீன்,  கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக  செயலாளர் நவநீதகண்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், எட்டயபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் […]

செய்திகள்

பா.ஜனதாவில் இருந்து விலகுகிறேன்-  அண்ணாமலைக்கு  கவுதமி கடிதம்

பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக கவுதமி, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு  அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:- கனத்த இதயத்தோடு பா.ஜ.க/வில் இருந்து விலகுகிறேன், 25 ஆண்டுகளாக பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு நேர்மையுடன் உளைத்து உள்ளேன். 2௦21 தேர்த;ஊ; ராஜபாளையம் தொகுதியில் கட்சிப்பணி ஆற்றினேன். ஆனால் சீட் கிடைக்கவில்லை. அழகப்பன் என்பவர் என்னிடம் இருந்து பணம், சொத்து,ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மோசடி செய்ததாக புகார் செய்து இருந்தேன், ஆனால் தற்போது அழகப்பனுக்கு ஆதரவாக […]