தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் உருவ படத்துக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு :- அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை ( 25) எம்ஜிஆர் மாளிகையில், கழக […]
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 17ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவில்பட்டி யில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் தலைமையில் மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு பேனா பென்சில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் பெண்களுக்கு இலவச குடம் வழங்கப்பட்டது. விழாவில் நகர அவைத் தலைவர் ஐயம்பெருமாள்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, மாநில செயற்குழு உறுப்பினர் பூமி பாலகன், ஒன்றிய வர்த்தக அணி […]
கோவில்பட்டி மக்களின் கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் ரெயில்நிலையத்தில் வந்தே பாரத் ரெயிலை வரவேற்க
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா. ஜனதா பொதுச்செயலாளர் வீ. வே. ரா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- நாளைய தினம் தென் தமிழக வளர்ச்சிக்காக மாண்புமிகு பாரத பிரதமரால் திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் விரைவு ரெயில் சேவை துவங்கப்பட உள்ளது. கோவில்பட்டி மக்களின் நலனிற்காக இந்த ரெயில்சேவை வேண்டும் என்று ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இடம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா. ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற குழு தலைவர் நயினார் […]
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை மற்றும் மேல்முறையீடு செய்வது தொடர்பாக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் இன்று 23.9.23 பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு அரசு பஸ் சேவை
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிறைவேற்றபடாமல் இருந்ததாது. இந்த நிலையில் இன்று கூடுதல் பேருந்து சேவையை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடக்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, ஒன்றிய சேர்மன் கஸ்தூரி, ஒன்றிய கழகச் செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேருந்து […]
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் தொடர்பாக இன்று கோவில்பட்டி நகர்மன்ற அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் எ கலந்து கொண்டார். நகரில் குடிநீர் விநியோகம் பற்றி கேட்டறிந்தார்.. மேலும் தற்போது நிலவும் பிரச்சனைகளை தீர்த்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ., நகர்மன்ற தலைவர் . கருணாநிதி, கோவில்பட்டி யூனியன் சேர்மன் […]
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது :- தமிழகத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை அடுத்தடுத்ததாக தொடங்கவுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏற்கனவே சென்னை கோவை இடையேயும், சென்னை பெங்களுர் இடையேயும் துவங்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து திருநெல்வெலிக்கு மேலும் புதிதாக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கவுள்ளது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி மாவட்டம் தொழில்துறை நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது […]
கோவில்பட்டி சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் இந்த புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு பல்வேறு விதமான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. 6 மணிக்கு மேல் சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு சுவாமி வீதிஉலா நடக்கிறது. கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி வீதி உலா வருகிறார்
கோவில்பட்டி நகர த. மா. கா. தலைவர் கே. பி.ராஜகோபால் தலைமையிலான குழுவினர் கோவில்பட்டி ரெயில் நிலைய அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்கள். இந்த குழுவில் வட்டாரத் தலைவர் கே பி ஆழ்வார் சாமி, மாவட்ட துணைத் தலைவர் முத்துசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், நகர செயலாளர் வின்சென்ட்,நகர துணைத் தலைவர் மணிமாறன், நகர துணை செயலாளர் ஜான்,வட்டாரத் துணைத் தலைவர் கண்ணன்,மாநில மாணவரணி செயலாளர் மாரிமுத்துராமலிங்கம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இவர்கள் […]
கோவில்பட்டியில் இயக்கப்பட்டு வரும் பல மினி பஸ்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்தார். அப்போது நகர இளைஞரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், நகர துணை செயலாளர் லியோ செண்பகராஜ் , பொருளாளர் தம்பித்துரை, வார்டு செயலாளர்கள் சுந்தர்ராஜ், வேலாயுதம் ஆகியோர் உடனிருந்தனர் புகார் மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- மினி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக […]