கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு அரசு பஸ் சேவை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிறைவேற்றபடாமல் இருந்ததாது.
இந்த நிலையில் இன்று கூடுதல் பேருந்து சேவையை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடக்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, ஒன்றிய சேர்மன் கஸ்தூரி, ஒன்றிய கழகச் செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பேருந்து சேவையை இடையில் நிறுத்தி விடாமல் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
