கோவில்பட்டியில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வு கூட்டம் ; அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் தொடர்பாக இன்று கோவில்பட்டி நகர்மன்ற அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் எ கலந்து கொண்டார். நகரில் குடிநீர் விநியோகம் பற்றி கேட்டறிந்தார்.. மேலும் தற்போது நிலவும் பிரச்சனைகளை தீர்த்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ., நகர்மன்ற தலைவர் . கருணாநிதி, கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி, நகராட்சி ஆணையர் கமலா, கோட்டாட்சியர் ஜெயம் கிறிஸ்டி பாய் மற்றும் துறை அதிகாரிகள் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்
