கோவில்பட்டி மக்களின் கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் ரெயில்நிலையத்தில் வந்தே பாரத் ரெயிலை வரவேற்க வாருங்கள் ; பா. ஜனதா அழைப்பு

தூத்துக்குடி வடக்கு
மாவட்ட பா. ஜனதா பொதுச்செயலாளர் வீ. வே. ரா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-
நாளைய தினம் தென் தமிழக வளர்ச்சிக்காக மாண்புமிகு பாரத பிரதமரால் திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் விரைவு ரெயில் சேவை துவங்கப்பட உள்ளது.
கோவில்பட்டி மக்களின் நலனிற்காக இந்த ரெயில்சேவை வேண்டும் என்று ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இடம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா. ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மூலமாக மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் கோரிக்கை வைத்து பெருமுயற்சி எடுத்து வருகிறார். விரைவில் நமக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்.
நாளை தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டு ரெயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வருகை தருகிறார். நாளை பிற்பகல் 1 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் நின்று செல்கிறது.
தூத்துக்குடி மாவட்ட மற்றும் கோவில்பட்டி மக்களின் கோரிக்கையை தெரிவிக்கும் வகையிலும், வந்தே பாரத்-ஐ வரவேற்கும் வகையிலும் அனைவரும் வருகை தர வேண்டும் என்று அன்போடு வரவேற்கிறேன்.
இவ்வாறு பா. ஜனதா
மாவட்ட பொதுச்செயலாளர் வீ. வே. ரா. கூறி உள்ளார்.
