• May 20, 2024

Month: June 2023

தூத்துக்குடி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று (26/06/2023) திங்கட்கிழமை, தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணியை தி.மு.க. நாடாளுமன்றக்குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. பச்சை கோடியை அசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் .அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் .ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட […]

தூத்துக்குடி

எம்.எல்.ஏ.வை பின்புறம் உட்கார வைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற கலெக்டர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு பணி மேற்கொண்டார். அவருடன் அந்த பகுதி அதிகாரிகள் மற்றும் சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் சென்று இருந்தனர். ஸ்ரீவைகுண்டம் வட்டம் பொன்னன்குறிச்சி கிராமத்தில் தாமரபரணி ஆற்றில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி பேரூராட்சிகள் மற்றும் 308 கிராம குடியிருப்பு பகுதிகளுக்கு 9 உறை கிணறுகள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த உரை கிணறுகளை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்ய சென்றார். அப்பகுதிக்கு கார் […]

கோவில்பட்டி

கோயில் கும்பாபிஷேக விழாவில் கடம்பூர் ராஜூ பங்கேற்பு

கோவில்பட்டி அருகே தெற்கு செமப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள இல்லங்குடி அய்யனார் ,பலவேசக்கார் திருக்கோயில் மற்றும் கோவில்பட்டி அருகே கொடுக்காம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள தேவி காளியம்மன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி  திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில்  திருக்குறள் `கரண ஆசான்’ பயிற்சி வகுப்பு

உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் கோவில்பட்டி திருக்குறள் மாவட்டம் சார்பாக, “கரண ஆசான் பயிற்சி” வகுப்பு தொடக்கவிழா மைக்ரோபாய்ண்ட் கணினி மையத்தில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்டத்தலைவர் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார், ஒய்.எம்.சி.ஏ. கோவில்பட்டி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் முன்னிலை வகித்தார், உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் க.தமிழரசன் வரவேற்று பேசினார். உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் மாநிலத்துணைத் தலைவர் பேராசிரியர் கருத்தப்பாண்டி  `கரண ஆசான்’ பயிற்சி குறித்து நோக்கவுரை ஆற்றினார்,   உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் மண்டலத்தலைவர் ப.முத்துச்செல்வம், இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் […]

செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்; டி.ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை அடுத்த புழலில் அதிமுக  சார்பில் நடந்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள்  கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி :- பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டது குறித்து… பதில் :- கோ பேக் ஸ்டாலின் பாட்னாவில் டிரெண்ட் ஆனது. உள்ளூரில் ஓணான் பிடிக்காதவர் வெளியூரில் புலியை பிடிப்பதாக கூறி புலிக்கு பயந்தவர்கள் தம் மீது […]

கோவில்பட்டி

எழுத்தாளர் உதயசங்கருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் தலைமையில் வாழ்த்து

தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்பாளுமைகளை தந்த கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தர்மர் ஆகியோர் சாகித்ய அகாடமி விருதும்,சபரிநாதன் சாகித்யா அகாடமியின் யுவ புரஸ்கார் விருதும் விருது பெற்று இருக்கிறார்கள்.   இவர்களை தொடர்ந்து கோவில்பட்டி எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் `பாலபுரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. எழுத்தாளர் உதயசங்கர் இதுவரை 150 நூல்கள் எழுதியுள்ளார். இவற்றில்51 நூல்கள் குழந்தைகளுக்கானவை. 42 நூல்கள் சிறு குழந்தைகளுக்கானவை ,9 நூல்கள் இளையோருக்கானவை, 68 நூல்கள் மொழிபெயர்ப்பு […]

கோவில்பட்டி

இனாம் மணியாச்சி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை

கோவில்பட்டி இனாம் மணியாச்சி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ஜெயபிரகாஷ் நாராயணசாமி என்பவர் முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார். இந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம் மணியாச்சி ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஊராட்சிகளில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) சார்பில் , கோவில்பட்டி  நகராட்சி ஆணையருக்கும் தூத்துக்குடி மாவட்ட […]

கோவில்பட்டி

கி.ரா. நினைவரங்கத்தில் கிராமிய பாடல் நிகழ்ச்சி

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் கோவில்பட்டி கிளை சார்பில் கிடை- கரிசல் கலை இலக்கிய களம் கி.ரா நினைவரங்கத்தில் நடைபெற்றது ஆசிரியை அமலபுஷ்பம் மண்ணின் கிராமிய பாடல்களை பாடினார். கதை சொல்லி ஆர்.ஜெ மணிகண்டன் கி.ரா எழுதிய கொத்தை பருத்தி கதையை பகிர்ந்தார்.இந் நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் ஜி சத்திய பாலன்,தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வ.பாலமுருகன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கோவில்பட்டியின் கிளைச் செயலாளர் முத்துராமன், கிளை […]

கோவில்பட்டி

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர்  துண்டு பிரசுரம் வினியோகம்

கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உ றுப்பினர் கடம்பூர் ராஜு சார்பில் அக்கட்சியினர் கோவில்பட்டி மற்றும் தொகுதி முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு தெருவாக சென்று வீடு மற்றும் கடைகள் தோறும் இந்த துண்டு பிரசுரம் வழங்கப்படுகிறது. இரட்டை இலை சின்னத்துடன் எடப்பாடி பழனிசாமி, கடம்பூர் ராஜு படங்கள் பொறிக்கப்பட்ட அந்த பிரசுரத்தில், கோவில்பட்டி நகராட்சி சாலை பணிகளை சீரமைக்க அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து நடைபெற்று  வந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதிய தாசில்தார் லெனின் பதவி ஏற்பு

கோவில்பட்டி தாசில்தார் சி.சுசிலா மே ,மாதம் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து  புதிய  தாசில்தாராக  விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் நிலம் எடுப்பு தனி தாசில்தார் யு.வசந்த மல்லிகா நியமிக்கப்பட்டார். புதிய தாசில்தாராக பதவி ஏற்று ஒரு மாதத்தில்  தாசில்தார் வசந்த மல்லிகா, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.. ராஜாராம் (வயது 64)என்பவர் விமான நகர் பகுதியில் உள்ள வீட்டு மனையில் வீடு கட்டுவதற்கு தடையில்லா சான்று வழங்க […]