இனாம் மணியாச்சி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை

 இனாம் மணியாச்சி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை

கோவில்பட்டி இனாம் மணியாச்சி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ஜெயபிரகாஷ் நாராயணசாமி என்பவர் முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார்.

இந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம் மணியாச்சி ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஊராட்சிகளில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) சார்பில் , கோவில்பட்டி  நகராட்சி ஆணையருக்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *