கோவில்பட்டி புதிய தாசில்தார் லெனின் பதவி ஏற்பு

கோவில்பட்டி தாசில்தார் சி.சுசிலா மே ,மாதம் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய தாசில்தாராக விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் நிலம் எடுப்பு தனி தாசில்தார் யு.வசந்த மல்லிகா நியமிக்கப்பட்டார்.
புதிய தாசில்தாராக பதவி ஏற்று ஒரு மாதத்தில் தாசில்தார் வசந்த மல்லிகா, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.. ராஜாராம் (வயது 64)என்பவர் விமான நகர் பகுதியில் உள்ள வீட்டு மனையில் வீடு கட்டுவதற்கு தடையில்லா சான்று வழங்க தாசில்தார் வசந்த மல்லிகாவை சந்தித்த போது அவர், ரூ 30ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.. லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் , லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. பீட்டர் பால் தலைமையிலான் போலீசார் பொறி வைத்து வசந்த மல்லிகா லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்,. அவருக்கு உதவியாக இருத்த டிரைவரும் கைதானார்.

.இந்த நிலையில் கோவில்பட்டி புதிய தாசில்தாராக கே.லெனின் நியமிக்கப்பட்டார். சாத்தான்குளம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றி வந்த கே.லெனின். பணியிடமாறுதலாகி இன்று கோவில்பட்டி தாசில்தாராக பதவி ஏற்றார். அலுவலகத்தில் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்
