• May 8, 2024

Month: June 2023

கோவில்பட்டி

தமிழ்ப் பேரரசு கட்சியினர்  நூதன போராட்டம்

கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு தமிழ்ப் பேரரசு கட்சியினர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் கழுதையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி திட்டங்குளம் பகுதியில்  அரசிடம் முறையான அனுமதி பெறாமல், சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், தனிநபர் ஒருவர் சந்தையினை அமைத்து நடத்தி வருகிறார். அந்த சந்தையை மூடுவதற்கு அரசு உயர் அதிகாரிகளும், நீதிமன்றமும் உத்தரவிட்டும் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அதை நிறைவேற்றாத தை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கட்சியினர் […]

செய்திகள்

அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் ; கவர்னர் உத்தரவு

அமலாக்கதுறை வழக்கில் செந்தில்பாலாஜி கைதான போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கைப்பட்டார்.பின்னர் அவருக்கு இருதய வால்வுகளில் ஏற்பட்டிருந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் அவருக்கு நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.வேலைவாங்கி தருவதாக கூறி பணமோசடி உள்ளிட்ட […]

கோவில்பட்டி

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ; கோவில்பட்டியில் உதவி

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக் கப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.பொறியியல் பட்டதாரியான இவர், ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி, ஐப்பான் ஆகிய மொழிகளில் வல்லமை பெற்றவர்.1989 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த சிவதாஸ் மீனா, முதலில் காஞ்சிபுரம் உதவி கலெக்டராக பணியை தொடங்கினார். பின்னர், கோவில்பட்டி உதவித் கலெக்டராகவும், வேலூர் கூடுதல் கலெக்டராகவும், மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து […]

கோவில்பட்டி

வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு பா. ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் ; மண்

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு என்ற பெயரில் அப்பாவி ஆட்டோ தொழிலாளர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அபராதம் செலுத்திய பின்னும், கூடுதல் பணம் செலுத்தினால் தான் வாகனத்தை ஒப்படைப்போம் என்று சொல்லி வருவதால் அதனை கண்டிக்கும் விதமாக கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய, கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள மாநில, மாவட்ட […]

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு

தமிழ்நாடு அரசு மாவட்ட, மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து ‘தமிழ்நாடு முதலமைச்சர்” பரிசு வழங்கி வருகிறது.அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம், மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வழங்கினார்.விருதினை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் ஆகியோர் […]

கோவில்பட்டி

பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கம் சார்பில் கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்து லாயல் மில் காலனியில் உள்ள பூங்காவில் ஏழு வகையான 40க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது, நிகழ்ச்சிக்கு ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கம் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்,ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி மாரியப்பன், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தனம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்,இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவி செல்வி சந்தனம் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்,இதில் ஊராட்சி செயலாளர் ரத்தினகுமார்,வார்டு உறுப்பினர் ராமமூர்த்தி […]

கோவில்பட்டி

காளி சண்டி கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நிறைவு

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் அமைந்துள்ள காளி சண்டி கோவிலில் வராகி அம்மன் சன்னதியில் 9 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா விமரி சையாக நடைபெற்று நிறைவு விழா 27.6.23 செவ்வாய்கிழமை நடைபெற்றது.மாலை 5 மணிக்கு செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பிருந்து வராகி அம்மன் உற்சவ சிலை அலங்கரிக்கபட்டு பால்குடம் அக்னி சட்டி எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக மந்தித்தோப்பு வழியாககோவில் வளாகத்தை அடைந்தது.பின்னர் மாலை 6மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்பகலச பூஜை யாகசாலை பூஜை பூர்ணாகுதி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் தரமற்ற சாலையா? பணியை நிறுத்தி பா.ஜனதா போராட்டம்

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுக்கிராமத்தில் ரூ.48 லட்சம்  மதிப்பீட்டில் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தார் சாலை அமைக்கும் பணிகள் தரமானதாக இல்லை என்றும் தரமற்ற முறையில், பெயரளவிற்கு சாலை அமைக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. மேலும்  சாலை அமைக்க பயன்படுத்தப்படும் ஜல்லி கற்கள் கையில் அள்ளும் அளவிற்கு தான் இருப்பதாக கூறி அப்பகுதி பொது மக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று பகலில் திடீரென பணிகளை தடுத்து நிறுத்தி […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 6 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன `மயில் கோலா’ மீன்

தூத்துக்குடியை அடுத்துள்ள தருவைகுளம் கடற்கரை கிராமத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 6 மாத தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள்.  இந்த நிலையில் நேற்று  அசோகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்த போது அவர்கள் வீசிய வலையில் அரிய வகை  `மயில் கோலா’ மீன் சிக்கியது.  இந்த மீனுக்கு  மயில் போன்று பெரிய தோகை இருப்பதால் இன்று மீன் மயில் மீன் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 7 […]

தூத்துக்குடி

வருமான வரித்துறை சோதனை: மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகம் விளக்கம்

தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர். வருமான வரித்துறை சோதனை தொடர்பாக மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.   வங்கியின் தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-  எங்கள் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.. அதிகாரிகள் கோரிய விளக்கங்கள் மற்றும் விவரங்களுக்கு பதிலளித்து, தேவையான தகவல்களை தொடர்ந்து […]