அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் ; கவர்னர் உத்தரவு
அமலாக்கதுறை வழக்கில் செந்தில்பாலாஜி கைதான போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கைப்பட்டார்.பின்னர் அவருக்கு இருதய வால்வுகளில் ஏற்பட்டிருந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அவருக்கு நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
வேலைவாங்கி தருவதாக கூறி பணமோசடி உள்ளிட்ட குற்ற வழக்குகளை எதிர்க்கொண்டுள்ளார் செந்தில்பாலாஜி என குறிப்பிட்டுள்ளார்.