தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு
தமிழ்நாடு அரசு மாவட்ட, மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து ‘தமிழ்நாடு முதலமைச்சர்” பரிசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம், மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விருதை இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வழங்கினார்.
விருதினை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
எப்போதும் இது போன்று சிறந்து விளங்க வேண்டும் என்று காவல் கண்காணிப்பளர் கேட்டுக்கொண்டார்.