• June 6, 2025

Month: May 2023

கோவில்பட்டி

கடம்பூரில் காட்சிப் பொருளாக உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறக்க கோரி மனு

கோவில்பட்டி அருகே கடம்பூரில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து 2020ஆம் ஆண்டு அப்போதைய வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையில் கடம்பூரில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் விரைந்து கட்டித் தரப்படும் என உறுதியளித்ததையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் நடைபெற இருந்த போராட்டமும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து வருவாய் […]

கோவில்பட்டி

தெற்கு திட்டங்குளம் தினசரி சந்தைக்கு தற்காலிக அனுமதி கிடையாது; கோட்டாட்சியர் கைவிரிப்பு

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமாக தெற்கு திட்டங்குளம் முத்துநகர் சந்திப்பில் உள்ள இடத்தில் தற்காலிகமாக கடைகள் அமைத்து வியாபாரிகள் கடைகள் தொடங்கினார்கள்.இதற்கு அனுமதி பெறவில்லை என்று கூறி சந்தை செயல்பட கோட்டாட்சியர் தடை விதித்தார். இதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 25 முதல் சந்தை மூடப்பட்டுள்ளது. இங்குள்ள வியாபாரிகள் வேறு எங்கும் கடை அமைக்க மாட்டோம். உரிய அனுமதி பெற்றவுடன் கடைகள் திறப்போம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி திட்டங்குளத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பா.ஜனதா வழக்கறிஞர்  பிரிவு மனு

பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவின் மாவட்ட துணைத் தலைவர் நீதிபாண்டியன்,  கோவில்பட்டி கொட்டாட்சியருக்கு எழுதிய மனுவை அவரது உதவியாளரிடம் வழங்கினார், அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-‘ .கோவில்பட்டி வட்டம் திட்டங்குளம் கிராமத்தில் கிழமேலாக செல்லும் நீரோடை உள்ளது. தற்போது ஓடையின் இரு புறங்களிலும் உள்ள நிலங்களில் வணிக ரீதியாக முதலீடு செய்துள்ளவர்கள் மேற்படி ஓடையை ஆக்கிரமிப்பு செய்துள்ள தோடு அந்த நிலத்தில் இருந்த வற்றாத கிணற்றையும் சட்டத்திற்கு புறம்பாக மூடியுள்ளனர். ஓடை […]

கோவில்பட்டி

பா.ஜனதா பட்டியல் அணி  நிர்வாகி கொலை சம்பவத்தை கண்டித்து கோவில்பட்டியில்  ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளருமான சங்கர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு படு கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி தி.மு.க அரசை கண்டித்தும் இன்று தமிழ்நாடு முழுவதும் பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி நகர பா.ஜனதா தலைவர் போலீஸ் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சாலை மறியல்; 300 பேர் கைது  

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி தரக்கோரி ஆலை நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என தெரிவித்து மக்கள் அதிகாரம், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. கட்சியினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் […]

கோவில்பட்டி

அ.தி.மு.க. சார்பில் மேதின பொதுக்கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பாக மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் .ராஜேந்திரன்  தலைமையில் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் மே தின பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதிமுக அமைப்பு செயலலாளர் .பச்சைமால்.,தலைமைக்கழக பேச்சாளர் .குமுதா பெருமாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளருமான  கடம்பூர்.செ.ராஜூ மே தின உரையாற்றினார்..,ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். கூட்டம் நடந்தபோது மழை பெய்தது. இருப்பினும் […]

ஆன்மிகம்

அக்னியில் குளிரும் ஸ்ரீ கழுகாசலமூர்த்தி

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் தமிழகத்தில் ” தென்பழனி” எனப்படும் கழுகாசலமூர்த்தி குடவரைக் கோவிலும் ஒன்றாகும், இத்திருத்தலத்தில் முருகன் ஒரு முகத்துடனும், ஆறுதிருக்கரங்களுடனும் மயில் மீது அமர்ந்து ராஜகோலத்தில் காட்சி மேலும் சிறப்பாகும், ஸ்ரீ அருணகிரிநாதர், வண்ணச்சரபம்  தண்டாயுதபாணி சுவாமி,ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்,மற்றும் பலரால் பாடல் பெற்ற ஸ்தலம் இங்கு கருவறையானது மலையை குடைந்து அங்கு அமையப்பட்டுள்ளது கோடையில் வெயிலின் வெப்பம், மலையினுடைய வெப்பம், தாக்கமும் காணப்படுகிறது, அதனால் கருவறையை சுற்றி இரண்டு அடி உயரத்திற்கு […]

தூத்துக்குடி

‘முதல்-அமைச்சர் விருது’ பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்; தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் ‘முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது’ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி 2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது 15.8.2023 அன்று […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே விபத்தில் 7 வயது சிறுமி பலி; பெற்றோர் உள்பட 3

கோவில்பட்டி அருகே  திருவேங்கடம் தாலுகா வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 38). இவர் கேரளாவில் ஒரு  ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (32). இவர்களுக்கு லயா (7) என்ற மகளும், துரு (5) என்ற மகனும் உண்டு. அங்குள்ள பள்ளியில் லயா 2-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபாகரன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் நேற்று முன்தினம் பிரபாகரன் தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் கோவில்பட்டியில் […]

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணி பயிற்சி முகாமுக்கு 25 வீரர்கள் தேர்வு

கோவில்பட்டியில் வருகிற  10-ந் தேதி  முதல் 13 ந் தேதி   வரை கே ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பில்  மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆக்கி போட்டி நடக்கிறது. ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து இந்த போட்டியை  நடத்துகிறது  அப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்துகொண்டு விளையாட உள்ளது தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணி தேர்வு இன்று காலை கோவில்பட்டி எஸ் டி […]