அ.தி.மு.க. சார்பில் மேதின பொதுக்கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பாக மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் .ராஜேந்திரன் தலைமையில் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் மே தின பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
அதிமுக அமைப்பு செயலலாளர் .பச்சைமால்.,தலைமைக்கழக பேச்சாளர் .குமுதா பெருமாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர்.செ.ராஜூ மே தின உரையாற்றினார்..,ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
கூட்டம் நடந்தபோது மழை பெய்தது. இருப்பினும் கூட்ட்டதினர் குடை பிடித்தபடி நின்று கொண்டு இருந்தனர். முக்கிய பேச்சாளர்களின் உரையை கேட்டனர்.
