தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணி பயிற்சி முகாமுக்கு 25 வீரர்கள் தேர்வு

கோவில்பட்டியில் வருகிற 10-ந் தேதி முதல் 13 ந் தேதி வரை கே ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பில் மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆக்கி போட்டி நடக்கிறது.
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து இந்த போட்டியை நடத்துகிறது அப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்துகொண்டு விளையாட உள்ளது தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணி தேர்வு இன்று காலை கோவில்பட்டி எஸ் டி ஏ டி செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற்றது
இந்த தேர்வில் 60 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர் இதில் 25 வீரர்கள் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டனர் நாளை மாலை பயிற்சி முகாம் தொடங்க உள்ளது பயிற்சியாளர்களாக இந்திய அணியின் முன்னாள் ஆக்கி வீரர் அஸ்வின், ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி துணைச்செயலாளர் மாரியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களின் பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட அணி மாநில போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ளது

தேர்வு செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆண்கள் ஆக்கி அணி வீரர்கள் பெயர் விவரம் வருமாறு
கோவில்பட்டி விளையாட்டு விடுதி: எழிலரசன், ஸ்ரீனிவாசன், முத்துக்குமார், வீரராகவன், நவீன் ராஜ்குமார் , ஆனந்தராஜ், ராமநாதன் ,
ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம்: மாதவன் , அருண்,
அசோக் நினைவு ஆக்கி அணி:- தனுஷ், சூர்யா, அசோக், சுதர்சன், முத்து முனீஸ்வரன், புவனேஸ்வரன்,
பாண்டவர்மங்கலம் ஆக்கி அணி:- மணி, முகில், சஞ்சய் , கண்ணன்
தாமஸ் நகர் அணி:- புஷ்பராஜ், ஆனந்தகுமார், பிரகதீஸ்வரன்,
யங் சேலஞ்சர்ஸ் அணி:- கவுதமன் , விஸ்வராஜ்
,நேதாஜி அணி:- சண்முகவேல்,
இலுப்பையூரணி அணி:- ஆனந்த்
லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி:- பரத் மற்றும் கிருஷ்ணகுமார்
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் நாளை(3-ந் தேதி) மாலை 4 மணிக்கு பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்திற்கு வருகை தருமாறு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர். செ. குரு சித்ர சண்முக பாரதி கூறி இருக்கிறார்.
