கோவில்பட்டி அருகே விபத்தில் 7 வயது சிறுமி பலி; பெற்றோர் உள்பட 3 பேர் காயம்

கோவில்பட்டி அருகே திருவேங்கடம் தாலுகா வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 38). இவர் கேரளாவில் ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (32). இவர்களுக்கு லயா (7) என்ற மகளும், துரு (5) என்ற மகனும் உண்டு. அங்குள்ள பள்ளியில் லயா 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபாகரன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் நேற்று முன்தினம் பிரபாகரன் தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் கோவில்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் இரவில் அங்கிருந்து காரில் தங்களது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை பிரபாகரன் ஓட்டினார்.
கோவில்பட்டி- திருவேங்கடம் சாலையில் சத்திரப்பட்டி பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த லோடு வேன் மீது எதிர்பாராதவிதமாக கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த சிறுமி லயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். படுகாயமடைந்த பிரபாகரன், தனலட்சுமி, துரு ஆகிய 3 பேரும் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் விபத்து பற்றி நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த லயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
