பா.ஜனதா பட்டியல் அணி நிர்வாகி கொலை சம்பவத்தை கண்டித்து கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளருமான சங்கர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு படு கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி தி.மு.க அரசை கண்டித்தும் இன்று தமிழ்நாடு முழுவதும் பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி நகர பா.ஜனதா தலைவர் போலீஸ் சீனிவாசன் தலைமை தாங்கினார்,. பட்டியல் அணி மாவட்ட தலைவர் அய்யாதுரை முன்னிலை வகித்தார்
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் ஆர் பி பாலு, சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமணன், மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட துணை தலைவர் சேது ராஜன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து, விவசாய அணி மாவட்ட தலைவர் மருதையா, கலை பிரிவு மாவட்ட தலைவர் விஜயகுமார், கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி, கருங்குளம் ஒன்றிய தலைவர் நாகமுத்து, நகர பொதுச்செயலாளர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,
