• June 6, 2025

Month: December 2022

கோவில்பட்டி

எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு தமிழக அரசு வழங்கிய கவுரவம்

தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண இராமனுஜம் – லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாக 16.9.1922 அன்று கி.ராஜநாராயணன் பிறந்தார். பள்ளிப்பருவ கல்வியை மட்டுமே முடித்திருந்த கி.ராஜநாராயணன் பேச்சுத்தமிழில் மண்மணமிக்க சிறுகதைகளை படைத்தார். அவரது படைப்புகளில் கரிசல் நிலவியலும் வெள்ளந்தித்தனமும், பேரன்புமிக்க மக்களின் வாழ்வும் இடம்பெற்றிருந்தன. கி.ராஜநாராயணன்- கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய முன்னோடியாக திகழ்ந்தார். கரிசல் கதைகள், கதவு, பெண் கதைகள், கிராமியக் கதைகள் போன்ற எண்ணற்ற சிறுகதைகளையும், கிடை […]

கோவில்பட்டி

கி.ராஜநாராயணன் சிலைக்கு கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை

கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் திருஉருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் ரூ. 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் செலவில் உருவான இந்த மணி மண்டபத்தில் கி.ராஜநாராயணன் பயன்படுத்திய பொருட்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபட்டு உள்ளன. மேலும் அவரது படைப்புகள் அடங்கிய நூலகம் இடம் பெற்றுள்ளது.இந்த மணி மண்டபம் திறப்புவிழா இன்று காலை நடைபெற்றது. சென்னை தலைமை செலகத்தில் இருந்து காணொளி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கி.ராஜநாராயணன் முழு உருவ சிலையுடன் மணி மண்டபம்; காணொளி காட்சி மூலம்

கரிசல் இலக்கியத்தின் தந்தை. மறைந்த எழுத்தாளர் `கி.ரா’ என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக கோவில்பட்டியில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது. கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ரூ.1கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மணி மண்டபத்தில் கி.ராஜநாராயணன் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது,மேலும் இங்குள்ள நூலகத்தில் கி.ரா.எழுதிய புத்தகங்கள் அனைத்தும் இடம்பெறுகின்றன. மேலும் மற்ற எழுத்தாளர்களின் கரிசல் இலக்கிய படைப்புகளும் வைக்கப்படும்,இது தவிர […]

செய்திகள்

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்களை விடுவிக்க கோரி மு.க.ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-தமிழகத்தில் நீண்ட காலமாக இந்து ஆலயங்கள் மற்றும் மத அமைப்புகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 மற்றும் 26 ஆகியவற்றுக்கு எதிரானது.இது தொடர்பாக 2014-ம் ஆண்டு தான் தொடர்ந்த வழக்கில், ஆலயத்தின் எந்த ஒரு மத செயல்பாடுகளின் உரிமைகளையும் எந்த ஒரு அரசும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.எனவே சுப்ரீம் […]

தூத்துக்குடி

சிறந்த அரசு பள்ளிகள்; தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பள்ளிகள் தேர்வு

2020 – 21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், துாத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, கயத்தாறு ஒன்றியம் அகிலாண்டபுரம் மகாலட்சுமி நடுநிலைப் பள்ளி, ஆழ்வார்திருநகரி ஒன்றியம் பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள், தேர்வு செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில், […]

செய்திகள்

சென்னை- தோகா விமானத்தில் திடீர் கோளாறு; டேக் ஆப் செய்ய முடியவில்லை

சென்னையில் இருந்து இன்று காலை 8 மணிக்கு தோகா வுக்கு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் பஸ் வகை விமானம் புறப்படுவதற்கு தயார் ஆனது,விமானத்தில் மொத்தம் 139 பயணிகள் இருந்தனர். விமானிகள் உட்பட 7 பணியாளர்கள் இருந்தனர். மொத்தமாக விமானத்தில் 146 பேர் பயணம் மேற்கொண்டனர். அந்த விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கியது. பின்னர் டேக் ஆப் செய்ய கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டது. அதன்படி விமானத்தை டேக் ஆப் செய்யும் போது அதில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. […]

தூத்துக்குடி

காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப 4-ம் தேதி எழுத்து

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகிற 4.12.2022 (ஞாயிற்றுகிழமை) அன்று எழுத்துத் தேர்வு கீழ்கண்ட மையங்களில் நடத்தப்படவுள்ளது. இணையவழியில் பதிவு செய்து […]

தூத்துக்குடி

பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றிய கிராமபெண்கள்

விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட புதூர் ஊராட்சி ஒன்றியம், அயன் கோடங்கிபட்டி, தாப்பாத்தி கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.5.50 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கபட்டுள்ளன,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், இந்த பஸ் நிழற்குடைகளை திறந்து வைத்தார். விழாவில் கலந்து கொண்ட கிராமத்து பெண்களை கிராம பெண்களை குத்துவிளக்கு ஏற்றும்படி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.கேட்டுக்கொண்டார். இதை ஏற்று பெண்கள் மகிழ்ச்சியுடன் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.இதை பார்த்து மகிழ்ந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., வீரப்பட்டி கிராமத்தில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே சூறாவளி காற்றுடன் மழை: நாசமான 300 ஏக்கர் மக்காச்சோள பயிர்களுக்கு

கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் கடந்த 28-ந் தேதி மாலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்.சேதமடைந்த பயிர்களை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) நாச்சியாரம்மாள், தாசில்தார் சுசீலா, வேளாண்மை உதவி இயக்குனர் சீ.நாகராஜ், வேளாண் அலுவலர் காயத்ரி, உதவி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் சேதம் அடைந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வில்லிச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை; கனிமொழி எம்.பி.யிடம்

ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ, கனிமொழி எம்.பி.யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-கோவில்பட்டி வில்லிச்சேரி கிராமத்தில் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது மருத்துவர்களும், நமது இயக்க தோழர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக வில்லிச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.இந்தப் பகுதியை சுற்றி உள்ள சத்திரப்பட்டி, இடைச்சேவல், நாலாட்டின்புத்தூர், மெய்த்தலைவன் பட்டி, கார்த்திகைப்பட்டி, ஊத்துப்பட்டி, சீனிவாசா […]