தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்களை விடுவிக்க கோரி மு.க.ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் நீண்ட காலமாக இந்து ஆலயங்கள் மற்றும் மத அமைப்புகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 மற்றும் 26 ஆகியவற்றுக்கு எதிரானது.
இது தொடர்பாக 2014-ம் ஆண்டு தான் தொடர்ந்த வழக்கில், ஆலயத்தின் எந்த ஒரு மத செயல்பாடுகளின் உரிமைகளையும் எந்த ஒரு அரசும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்கள் மற்றும் மத அமைப்புகளை விடுவிக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்ப்படும்’
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.
