கி.ராஜநாராயணன் சிலைக்கு கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை

கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் திருஉருவ சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் ரூ. 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் செலவில் உருவான இந்த மணி மண்டபத்தில் கி.ராஜநாராயணன் பயன்படுத்திய பொருட்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கபட்டு உள்ளன. மேலும் அவரது படைப்புகள் அடங்கிய நூலகம் இடம் பெற்றுள்ளது.
இந்த மணி மண்டபம் திறப்புவிழா இன்று காலை நடைபெற்றது. சென்னை தலைமை செலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல் அமைச்சர் மு.க,ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஆட்சியர் செந்தில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
இதை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மணி மண்டபம் திறந்து விடப்பட்டது. முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ. மணிமண்டபம் வந்தார். அவர் கி.ராஜநாராயணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மணிமண்டபத்தை சுற்றி பார்த்தார்.அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் வந்து இருந்தனர்,
