கோவில்பட்டி நகராட்சி கூட்டம்: உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு தலைவர், ஆணையாளர் அதிரடி பதில்
கோவில்பட்டி நகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் ஓ.ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர கூட்டத்தில் நடந்த விவாதம் விவரம் வருமாறு:-நகர்மன்ற உறுப்பினர் க.சீனிவாசன்(சி.பி.எம்.):- தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ரூ.2200 கோடி ஒதுக்கி உள்ளது. ஆனால் கோவில்பட்டி நகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கோவில்பட்டி நகராட்சியில் திருட்டுத்தனமான குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டு வருகிறது. நகர் முழுவதும் இந்த சோதனை மேற்கொண்டு முறையின்றி எடுக்கப்பட்ட […]