மருத்துவமனை லிப்டில் சிக்கி தவித்த அமைச்சர் – அதிகாரிகள்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு .திட்டங்கள் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
இதற்காக மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழா நடந்த அரங்குக்கு செல்வதற்காக தரைதளத்தில் இருந்து லிப்ட் ஐ பயன்படுத்தினார்,
.அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தில் லிப்டில் சென்றபோது திடீரென லிப்டில் கோளாறு ஏற்பட்டு இயக்கம் தடைபட்டது.
இதனால் லிப்டில் சிக்கிகொண்ட அமைச்சர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர், சில நிமிடங்கள் லிப்டுக்குள் சிக்கி தவித்தனர், பாதுகாப்பு குழுவினர் உடனடியாக செயல்பட்டு லிப்டின் ஆபத்துக்காலத்தில் பயன்படுத்தும் அவசர கதவின் வழியே அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதில் இருந்தவர்களை வெளியேற்றினர். அதன்பிறகு மாடிப்படி வழியாக சென்று விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார்.
அமைச்சர் லிப்டில் சிக்கிக்கொண்ட விவகாரம், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.