• May 20, 2024

பெண்ணை தாக்கி நகை பறித்தவருக்கு 2 ஆண்டு ஜெயில்; கோவில்பட்டி கோர்ட்டு தீர்ப்பு

 பெண்ணை தாக்கி நகை பறித்தவருக்கு 2 ஆண்டு ஜெயில்; கோவில்பட்டி கோர்ட்டு தீர்ப்பு

கோவில்பட்டியை அடுத்த கழுகுமலை ஓம்சக்தி நகரை சோ்ந்த காளிதாஸ் என்பவரின் மனைவி சாந்தி (வயது 36). இவா் கடந்த 2021 மே 10 -ம் தேதி தன்னிடம் இருந்த உடைந்த தங்க கம்மலை சரிசெய்ய, ஒரு நகைகடைக்கு சென்றார்,
கம்மலை இப்போது சரி செய்ய முடியாது, இன்னும் 2 மணி நேரம் ஆகும் என கூறிநார். இதனால் சாந்தி அங்கிருந்து புறப்பட்டார். அப்போது கடையிலிருந்த நபா், தனது அண்ணனின் கடையில் நகையை சரிசெய்து தருவதாக கூறி இருக்கிறார்
இதை நம்பிய சாந்தி அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். கழுகுமலை – கோவில்பட்டி சாலையில் காளாங்கரைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திய அந்த நபா், சாந்தியை தாக்கி அவா் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார்.
நகைகளை பரிகொடுத்த சாந்தி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இறுதியில் சுரண்டை காவல் நிலையத்திற்கு உள்பட்ட வெள்ளைக்கல் காமாட்சியம்மன் கோவில் தெருவை சோ்ந்த முருகன் மகன் திருமலைகுமார என்பவரை கைது செய்தனா்.
இதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் (எண் 1) விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கடற்கரை செல்வம், குற்றம்சாட்டப்பட்ட திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *