• May 20, 2024

குரூப்-1 தேர்வு: அதிகாரபூர்வ விடைகள் வெளியீடு

 குரூப்-1 தேர்வு: அதிகாரபூர்வ விடைகள் வெளியீடு

துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது.
முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு கடந்த நவம்பர் 19–ந்தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட 38 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வை எழுதுவதற்காக 3,22,414 பேர் விண்ணபித்திருந்த நிலையில். 1,90,957 பேர் மட்டுமே குரூப் 1 தேர்வெழுதினர்.
இந்த நிலையில் நவம்பர் 19–ந்தேதி நடந்த குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை டி.என்.பி.எஸ்.சி.நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் 4 கேள்விகளுக்கான விடைகள் தவறாக தரப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *