பசுமை தமிழ்நாடு திட்டத்தை விளாத்திகுளம் தொகுதி தான் முதலில் நிறைவேற்றும்-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.உறுதி
தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 265 கோடி உள்நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. அதன் ஒருபகுதியாக விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு கோடி மரங்கள் நடவு செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகளிலும், 29 கிராம ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கப்பட உள்ளன. விளாத்திகுளத்தில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய கண்மாய் கரையோரம் 700 மரக்கன்றுகள் நடும் […]