• May 20, 2024

கோவில்பட்டி அருகே தண்டவாளத்தை கடந்தவர் ரெயிலில் அடிபட்டு பலி

 கோவில்பட்டி அருகே தண்டவாளத்தை கடந்தவர் ரெயிலில் அடிபட்டு பலி

கோவில்பட்டி, முத்து மாரியம்மன் கோவில் முதல் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 62). இவர், இலுப்பையூரணி அருகில் ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை தன்னுடைய வீட்டில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
வேலாயுதபுரம் அருகில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்த போது அவ்வழியே வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *