ஓசியில் வரமாட்டேன்… அரசு டவுண் பஸ்சில் வலுக்கட்டாயமாக டிக்கெட் வாங்கிய மூதாட்டி-வைரலாகும் வீடியோ
தமிழக அரசு பெண்களுக்கு அரசு டவுண் பஸ்களில் இலவச பயணத்தை அறிவித்து இருக்கிறது. டிக்கெட் வாங்காமல் இலவசாமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்து நடைமுறையில் உள்ளது. பெண்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் இந்த திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
இந்த நிலையில் கோவை மதுக்கரையில் அரசு டவுண் பஸ்சில் ஒரு மூதாட்டி ஒருவர் ஓசியில் நான் வரமாட்டேன், எனக்கு டிக்கெட் கொடு என்று கேட்டு நடத்துனரிடம் வாக்குவாதம் செய்கிறார்.
ஆனால் அந்த கண்டக்டர் டிக்கெட் வைத்துகொண்டு பணம் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் அந்த மூதாட்டி வலுக்கட்டாயமாக பணத்தை தந்து விடுகிறார். நீண்ட விவாதத்துக்கு பிறகு வேறுவழியின்றி நடத்துனரும் பணத்துக்கான டிக்கெட் கொடுக்கிறார். இந்த வாக்குவாத வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.