• May 20, 2024

மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கடம்பூர் ராஜூ தலைமையில் வரவேற்பு

 மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கடம்பூர் ராஜூ தலைமையில் வரவேற்பு

மதுரை மாநகருக்கு இன்று வருகை புரிந்த அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரை-தூத்துக்குடி பைபாஸ் ரோடு டோல்கேட் அருகில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ஆள் உயர் மாலை அணிவித்து மலர் கிரீடம் சூட்டப்பட்டது.


இதில் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.மோகன் , விளாத்திக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.சின்னப்பன் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *