• May 20, 2024

கோவில்பட்டியில் நிதி நிறுவனம் முற்றுகை; பணம் தராமல் ஏமாற்றி விட்டதாக பொதுமக்கள் புகார்

 கோவில்பட்டியில் நிதி நிறுவனம் முற்றுகை; பணம் தராமல் ஏமாற்றி விட்டதாக பொதுமக்கள் புகார்

கோவில்பட்டி மாதங்கோவில் சாலையில் அமுதசுரபி என்ற நிதி நிறுவனத்தின் கிளை இயங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களாக வாடிக்கையாளர்கள் சேமித்து வைத்த பணத்தினை தரமால் ஏமாற்றி வருவதாக கூறி நேற்று இரவில் 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்தினை முற்றுகையிட்டனர்.


அவர்கள் அந்த அலுவலக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு போலீசார் விரைந்து சென்று இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தினர். முறையாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *