• May 20, 2024

கோவில்பட்டியில் நரிக்குறவர்கள ஆர்ப்பாட்டம்

 கோவில்பட்டியில்  நரிக்குறவர்கள ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே மந்திதோப்பு நரிக்குறவர் காலனியில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கான ஒதுக்கப்பட்ட இடத்தினை சிலர் ஆக்கிரமித்து கோவில் கட்டியுள்ளதாகவும், தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அப்படிப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் ஊசி, பாசி விற்பனை செய்யும் நரிக்குறவர் மக்களை திருநங்கைகள் தாக்கி அவதூறாக பேசி வருவதாகவும், தாங்களை தாக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் நரிக்குறவர் சமூகத்தினை சேர்ந்தவர்கள், பா.ஜ.க. நிர்வாகிகளுடன் வந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் உதவியாளரிடம் அளித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *