Month: July 2022

சிறுகதை

நூறு ரூபாய் நோட்டு….சிறுகதை

சாம்பசிவம் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.பை நிறைய சம்பளம் இல்லாவிட்டாலும் கை நிறைய சம்பளம்.அலுவலகத்துக்கும் அவரது வீட்டுக்கும் வெகு தூரம்.பஸ்சில் வந்துதான் அலுலகத்துக்கு நடந்து செல்வார்.திருமணம் ஆகாதவர்.இரண்டு தங்கச்சிகளுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு.அப்பா இறந்து போனபிறகு அனைத்து செலவும் அவர் தலையில் வந்து விழுந்தது.தங்கச்சிகள் திருமணத்துக்காக பணத்தை சேர்க்கவேண்டியது இருந்ததால் செலவுகளை குறைத்து கொண்டார்.சிக்கனத்தின் வடிவமாக இருந்தார். அவரை கஞ்சன் என்று அனைவரும் கேலி பேசுவர். பிழைக்க தெரியாதவன் என்று திட்டுவர்.சம்பளத்தோடு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோட்டத்தில் வியாழக்கிழமை மின்தடை பகுதிகள்

கோவில்பட்டி கோட்டத்தில் பொது மக்களுக்கு தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது. “எனவே, வியாழன் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் வேலாயுதபுரம் 2-வது தெரு பகுதிக்கும், சிட்கோ உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் எட்டையாபுரம் ரோடு, […]

செய்திகள்

நாளை ஆடி அமாவாசை: சதுரகிரியில் குவியும் பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்ராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டு நாளை 28-ந் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது.இதையடுத்து பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்கு […]

கோவில்பட்டி

248 கிராமங்களின் கூட்டு குடிநீர் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? நகராட்சி நிர்வாக

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார்,ஓட்டபிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 248 கிராமங்களின் கூட்டு குடிநீர் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் கயத்தார் வட்டம் ராஜாபுதுக்குடி கிராமத்திற்கு குடிநீர் வழங்குமாறு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கோரிக்கை விடுத்து இருந்தார்.இதற்கு பதில் அளிக்கும் வகையில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.வுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணை செயலாளர் மீனாட்சி அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அப்துல்கலாம் நினைவு தினம்

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி ஜீவ அனுகிரகா பசுமை இயக்கம் சார்பில், அதன் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு, ஜீவ அனுகிரகா பசுமை இயக்கம் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார் . ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் 100 பேருக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர், […]

கோவில்பட்டி

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதி கோவில்பட்டி வந்தது;உற்சாக வரவேற்பு

இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ‘செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி செஸ் ஒலிம்பியாட் தீப ஒளி ஜோதி தமிழகம் முழுவதும் வலம் வருகிறது இந்த தீப ஒளி ஜோதி நேற்று தூத்துக்குடி மாவட்டம் வந்தது. மாவட்டத்தின் பல்வேறு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கம்பன் கழக 2 நாள் விழா: சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும்

கோவில்பட்டி கம்பன் கழக முதலாம் ஆண்டுவிழா வருகிற 3௦ மற்றும் 31-ந்தேதிகளில் நடக்கிறது,கதிரேசன் கோவில் சாலையில் உள்ள ஆர்த்தி மகால் மண்டபத்தில் நடைபெறுகிறது.தொடக்க விழா3௦-ந் தேதி மாலை 5.3௦ மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியை அமிர்தவர்ஷிணி மற்றும் குழுவினரின் தமிழிசை நடக்கிறது. 6.15 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நடக்கிறது, ஆர்த்தி மருத்துவமனை டாக்டர் ஆர்,கோமதி, மதுரை கம்பன் கழக தலைவர் சங்கர சீத்தாராமன், தொழில் அதிபர் ஹரி பாலகன் ஆகியோர் திருவிளக்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி, கழுகுமலையில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் மு.சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின்பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி துணை மின் நிலையத்தின் நான்கு வழிச்சாலையில் உள்ள பாலாஜி நகர், மீனாட்சி நகர் ,விஜயாபுரி துணை […]

கோவில்பட்டி

தம்பதி கொலையில் உருக்கம் :போலீஸ் எச்சரித்தும் பெற்றோரை சமாதானம் செய்ய வந்த புதுப்பெண்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 50). இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியின் மகள் ரேஷ்மா (19), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜ் (28). வெளிநாட்டில் வேலை பார்த்த மாணிக்கராஜ் ஊருக்கு திரும்பி கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.மேலும் முத்துக்குட்டி, மாணிக்கராஜ்க்கு மாமா முறை என்று கூறப்படுகிறது. மாணிக்கராஜ்- ரேஷ்மா இருவரும் […]

தூத்துக்குடி

அச்சிட்ட காகிதங்களில் வடை, பஜ்ஜி: தூத்துக்குடியில் 6 கடைகளுக்கு தலா ரூ.1௦௦௦ அபராதம்

அச்சிட்ட காகிதங்களில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை வழங்கக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் 65 டீக்கடைகள் ஆய்வு செய்ததில், 14 கடைகளில் நியூஸ் பேப்பர்களில் வடை மற்றும் இதர உணவுப் பொருட்கள் நேரடியாக வழங்குவது கண்டறியப்பட்டது.இதை தொடர்ந்து நியமன அலுவலரிடத்தில் அபராதம் விதிக்க உணவு பாதுகாப்பு அலுவலர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், […]