• June 6, 2025

Month: July 2022

சிறுகதை

மார்க்கெட்டில் மாறுவேடம்…(சிறுகதை)

நகரின் பெரிய மார்க்கெட்… கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரே இரைச்சல்… காய்கறிகள் வேனில் வந்து இறங்கி கொண்டிருந்தன.அந்த மார்க்கெட்டின் வெளியே ஓரத்தில் காரை நிறுத்தினார் சாம்பசிவம். பெரும் பணக்காரர். ஆனால் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். பணக்காரர்கள் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து செல்வார். கையில் மோதிரம் கழுத்தில் தங்க சங்கிலி என்று பளபளப்பாக காட்சி தருவார். மற்ற இடங்களில் எளிமையாக இருப்பார். ஏன் என்றால் யாரும் பணம் கேட்டுவிடக்கூடாது என்ற முன் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிரடி சோதனை: 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பாலித்தீன் பைகள் போன்றவை பயன்பாட்டுக்கு தமிழகத்தில் ஏற்கனவே தடை உள்ளது. இருப்பினும் எந்த தடிமன் வரையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என்பதில் குழப்பம் இருப்பதால் பல கடைகள், வணிக நிறுவனங்களில் பாலீத்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் ஜூலை 1-ம் தேதி முதல் முழுமையாக தடை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பஸ் நிலையத்தில் 30 தற்காலிக கடைகள் அகற்றம்; கூரை ஆக்கிரமிப்புகளை அகற்ற

கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த பஸ் நிலையம் பயணிகளின் வசதி பற்றி கண்டுகொள்ளாமல் வியாபார கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகராட்சி வருமானத்துக்கு வழிவகுத்து உருவாக்கப்பட்டது போல் காட்சி அளிக்கிறது.வணிக வளாகம் போல் நிறைய கடைகள், அலுவலகங்கள், கிளினிக்குகள் பஸ் நிலைய வளாகத்தில் உள்ளன. இது தவிர தற்காலிக கடைகள் பெருகி காணப்பட்டன.இதன் காரணமாக பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் நிறுத்துவதற்கு கூட இடம் கிடைக்காது. இதனால் பஸ் நிலையத்துக்கு வெளியே பஸ்களை […]

தூத்துக்குடி

டாக்டரின் பாராட்டு கடிதத்தால் திக்குமுக்காடிய போலீஸ்காரர்

இலங்கை தலைநகர் கொழும்புவில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருபவர் டாக்டர் ராமசுப்பு . இவர் கடந்த 18.6.2022 மற்றும் 19.6.2022 ஆகிய நாட்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு குடும்பத்துடன் வழிபாடு செய்வதற்காக வந்து ஒரு தனியார் விடுதியில் தங்கினார். 18.6.2022 அன்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளில் டாக்டர் ராமசுப்புவின் 1 வயது பேரனுக்கு திடீர் வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டான்.இதனால் ராமசுப்பு மருந்து வாங்குவதற்காக விடுதியிலிருந்து வெளியே […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்

இன்று ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்பணி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவர்கள் சங்க கோவில்பட்டி கிளை தலைவர் டாக்டர் சுப்புலட்சுமி, மந்திதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மந்திதோப்பு ஊராட்சி செயலர் பாலகுமார் அனைவரையும் வரவேற்றார்.மரக்கன்றுகள் நடும் பணியை ரோட்டரி […]

ஆன்மிகம்

ஆன்மிகம் அறிவோம்…

அட்ட வீரட்டத் ஸ்தலங்கள் திருக்கண்டியூர் —- பிரமன் சிரம் கொய்தது திருக்கோவலூர்__ அந்தகாசுரனைச் சங்கரித்தது திருஅதிகை __ திரிபுரத்தை எரித்தது திருப்பறியலூர் __ தக்கன் சிரங்கொய்தது திருவிற்குடி —- சலந்தராசுரனைச் சங்கரிதத்து வழுவூர் (வைப்புத்தலம்) — யானையை உரித்தது திருக்குறுக்கை — காமனை எரித்தது திருக்கடவூர் —- எமனை உதைத்தது. பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள் கேதாரம் (இமயம்) —- கேதாரேஸ்வர்ர் சோமநாதம் (குஜராத்) —- சோமநாதேஸ்வரர் மகாகாளேசம் (உஜ்ஜயினி) —- மகாகாளேஸ்வரர் விசுவநாதமே (காசி) —- விஸ்வநாதேசுவரர் […]

செய்திகள்

10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம்; அமைச்சர் மா.சுப்பிரமனியன் பேட்டி

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் திடீரென தொற்றின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. நேற்று ஒருநாள் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அந்தத் துறையின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடன் கூறியதாவது;-கடந்த 2 வாரங்களில் கொரோனா பரிசோதனையானது 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பானது இணை […]

சினிமா

திரையரங்குகளில் இன்று வெளியான தமிழ் படங்கள்

திரையரங்குகளில் விக்ரம் படத்துக்கு பிறகு பெரிய படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக கொண்டு மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 1100 திரையரங்குகளில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.அருள் நிதி நடிப்பில் உருவாகியுள்ள டி-பிளாக் படம் இன்று திரைக்கு […]

செய்திகள்

40 அடி பாலத்தில் இருந்து கங்கை நதியில் குதித்த 73 வயது பாட்டியின்

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் அமைந்திருக்கும் 40 அடி உயர ஹர்கி பைடி பாலத்திலிருந்து 73 வயது பாட்டி ஒருவர் கங்கைநதியில் குதித்து சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அசோக் பசோயா என்பவர், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். வீடியோவில், ஹர்கி பைடி பாலத்திலிருந்து கங்கைநதியில் 73 வயதான ஓம்வதி என்ற பாட்டி எந்தவித பயமின்றி நதியில் துணிச்சலுடன் குதிக்கிறார். பின்னர் அசால்ட்டாக நதியில் நீச்சலடித்து சென்று கரையேறுகிறார். அங்கு கூடியிருக்கும் மக்கள் […]

தூத்துக்குடி

மளிகை கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய 3 பேர் சிக்கினர்

தூத்துக்குடி முத்தையாபுரம் முள்ளக்காடு, ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த பெருமாள் (39) என்பவர் சிவந்தாகுளம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 29.6.2022 அன்று இரவு கடையின் பூட்டை உடைத்து ரூ. 30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதேபோன்று அன்றைய தினமே பிரையண்ட் நகர் 3-வது தெருவில் பரமேஸ்வரன் (54) என்பவரின் மளிகை கடையிலும் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரம், ரூ 2,000 ஆயிரம் […]