ஆன்மிகம் அறிவோம்…
அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்
- திருக்கண்டியூர் —- பிரமன் சிரம் கொய்தது
- திருக்கோவலூர்__ அந்தகாசுரனைச் சங்கரித்தது
- திருஅதிகை __ திரிபுரத்தை எரித்தது
- திருப்பறியலூர் __ தக்கன் சிரங்கொய்தது
- திருவிற்குடி —- சலந்தராசுரனைச் சங்கரிதத்து
- வழுவூர் (வைப்புத்தலம்) — யானையை உரித்தது
- திருக்குறுக்கை — காமனை எரித்தது
- திருக்கடவூர் —- எமனை உதைத்தது.
பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள்
- கேதாரம் (இமயம்) —- கேதாரேஸ்வர்ர்
- சோமநாதம் (குஜராத்) —- சோமநாதேஸ்வரர்
- மகாகாளேசம் (உஜ்ஜயினி) —- மகாகாளேஸ்வரர்
- விசுவநாதமே (காசி) —- விஸ்வநாதேசுவரர்
- வைத்தியநாதம் (மகாராஷ்டிரம்) —- வைத்திநாதேசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்) —- பீமநாதேசுவரர் - நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்) —- நாகநாதேசுவர்ர்
- ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) — ஓங்காரேசுவரர்
- த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்) — த்ரயம்பகேசுவரர்
- குசமேசம் (மகாராஷ்டிரம்) —- குஸ்ருணேச்சுவர்ர்
- மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) — மல்லிகார்ச்சுனர்
- ராமநாதம் (ராமேஸ்வரம்) —- ராமநாதேஸ்வரர்
முக்தி அளிக்கும் ஸ்தலங்கள்
- திரு ஆரூர் —- பிறக்க முக்தி தருவது
- சிதம்பரம் —– தரிசிக்க முக்தி தருவது
- திருவண்ணாமலை —- நினைக்க முக்தி தருவது
- காசி —- இறக்க முக்தி தருவது.
பஞ்சபூத ஸ்தலங்கள்
- திரு ஆரூர் , காஞ்சிபுரம் —- பிருதிவி (நிலம்)
- திரு ஆனைக்கா —– அப்பு (நீர்)
- திருவண்ணாமலை —– தேயு (தீ)
- திருக்காளத்தி —– வாயு (வளி)
- சிதம்பரம் —- ஆகாயம் (விசும்பு)
நடராஜருக்கான பஞ்ச சபைகள்
- திருவாலங்காடு — இரத்தின சபை
- சிதம்பரம் — கனகசபை (பொன்னம்பலம்)
- மதுரை — ரஜதசபை (வெள்ளியம்பலம்)
4, திருநெல்வேலி — தாமிர சபை
5, திருக்குற்றாலம் — சித்திர சபை.
வியாக்ரபாதர் வழிபட்டவை
புலியூர்கள்
- பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
- திருப்பாதிரிப்புலியூர்
- ஓமாம்புலியூர்
- எருக்கத்தம்புலியூர்
- பெரும்புலியூர்
சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்
முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள் இந்த தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களை பெற்று தனிப்பட்டநடனங்களை யாடுவார்கள்.
- திருஆரூர் — வீதிலிடங்கா் — அசபா நடனம்
- திருநள்ளாறு — நகர விடங்கா்— உன்மத்த நடனம்
- திருநாகைக்ரோணம் — சுந்தரவிடங்கர் — வீசி நடனம்
- திருக்காறாயில் — ஆதிவிடங்கர் — குக்குட நடனம்
- திருக்கோளிலி — அவனிவிடங்கர் — பிருங்க நடனம்
- திருவாய்மூர் —- நீலவிடங்கர் — கமல நடனம்
- திருமறைக்காடு — புவனிலிடங்கர் — கம்சபாதநடனம்.
சிறப்பு தாண்டவ ஸ்தலங்கள்
- தில்லைச் சித்திரக் கூடம், பேரூர் —- ஆனந்த தாண்டவம்
- திரு ஆரூர் —- அசபா தாண்டவம்
- மதுரை —- ஞானசுந்தர தாண்டவம்
- புக்கொளியூர் —-. ஊர்த்துவ தாண்டவம்
- திருமுருகன் பூண்டி —- பிரம தாண்டவம்
சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்
- கச்சி ஏகம்பம்
- திருக்காளத்தி
- கோகர்ணம்
- திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
- திருவைகாவூர்
காசிக்கு ஈடான ஸ்தலங்கள்
- திருவெண்காடு
- திருவையாறு
- மயிலாடுதுறை
- திருவிடை மருதூர்
- திருச்சாய்க்காடு
- திருவாஞ்சியம் நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்
- நந்தி சங்கம தலம் —- கூடலையாற்றூர் திருநணா (பவாநிகூடல்)
- நந்தி விலகியிருந்த தலங்கள் —- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக),திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).
- நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் —- திருவெண்பாக்கம்
- நந்திதேவர் நின்ற திருக்கோலம் —- திருமாற்பேறு
- நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் — திருமழபாடி
- திருக்கீழ்வேளூர் – ஒரு பக்தையின் பொருட்டு
- திருநள்ளாறு – ஒரு இடையனுக்காக
நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்
1. நந்தி சங்கம தலம் – கூடலையாற்றூர் திருநணா (பவாநிகூடல்)
2. நந்தி விலகியிருந்த தலங்கள் —- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக),
திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).
3. நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் — திருவெண்பாக்கம்
4. நந்திதேவர் நின்ற திருக்கோலம் — திருமாற்பேறு
5. நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் — திருமழபாடி
6. திருக்கீழ்வேளூர் – ஒரு பக்தையின் பொருட்டு
7. திருநள்ளாறு – ஒரு இடையனுக்காக
சப்த ஸ்தான (ஏழூர் விழா) தலங்கள்
திருவையாறு
திருப்பழனம்
திருச்சோற்றுத்துறை
திருவேதிகுடி
திருக்கண்டியூர்
திருப்பூந்துருத்தி
திருநெய்த்தானம்
(இவை திருவையாற்றைச சுற்றி அமைந்துள்ளன)
திருமால் சன்னதி உள்ள சிவாலயங்கள்
- திருவோத்தூர் — ஆதிகேசவப் பெருமாள்
- கச்சி ஏகம்பம் —- நிலாத்துண்டப் பெருமாள்
- கொடிமாடச் செங்குன்றூர் — ஆதிகேசப் பெருமாள்
- சிதம்பரம் — கோவிந்தராஜப் பெருமாள்
- திருநணா — ஆதிகேசவப் பெருமாள்
- சிக்கல் — கோலவாமனப் பெருமாள்
- திருநாவலூர் — வரதராஜப் பெருமாள்
- திருநெல்வேலி — நெல்லை கோவிந்தர்
- திருப்பழனம் — கோவிந்தர்
10.பாண்டிக் கொடுமுடி — அரங்கநாதர் - திருப்பத்தூர் — அரங்கநாதர்
- திருவக்கரை — அரங்கநாதர்
ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற கோயில்கள்
- திருவாரூர் அரநெறி —- திருவாரூர்
- திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் — திருப்புகலூர்
- மீயச்சூர் இளங்கோயில் —- மீயச்சூர்.
காயாரோகணத் தலங்கள்
- கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
- குடந்தைக் காரோணம்
- நாகைக் காரோணம்
மயானத் தலங்கள்
- கச்சி மயானம்
- கடவூர் மயானம்
- நாலூர் மயானம்
கைலாயத் தலங்கள்-
தெட்சண கைலாசம்
- திருக்காளத்தி
- திருச்சிராப்பள்ளி
- திரிகோணமலை (இலங்கை)
பூலோக கைலாசம்
- திருவையாறு
- திருக்குற்றாலம்
- சிதம்பரம்
அழகிற் சிறந்த கோயில்கள்
- தேரழகு — திருவாரூர்
- வீதி அழகு — திருஇடை மருதூர்
- மதிலழகு — திருவிரிஞ்சை
- விளக்கழகு — வேதாரண்யம்
- கோபுரமழகு — திருக்குடந்தை
- கோயிலழகு – காஞ்சி.
பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு
- திருக்குற்றாலம் — திருவனந்தல் சிறப்பு.
- இராமேச்சுரம் — காலை பூசை சிறப்பு.
- திருஆனைக்கா — மத்தியான பூசை சிறப்பு.
- திரு ஆரூர் — சாயுங்கால பூசை சிறப்பு.
- மதுரை — இராக்கால பூசை சிறப்பு.
- சிதம்பரம் — அர்த்தசாம பூசை சிறப்பு.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்
குங்கிலியக்கலயர், முருகர், குலச்சிறை, அப்பூதி, நீலநக்கர்,சிறுத்தொண்டர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசி,திருநீலகண்டயாழ்பாணர்.
நடராசர் அபிஷேக நாட்கள் 6
மார்கழி = ஆதிரை , சித்திரை =திருவோணம், ஆனி = உத்திரம் மாசி = ஆவணி
புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை. ஏனையமூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.
ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்
மதுரை, சிதம்பரம், ராமேஸ்வரம்.
ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் அமைந்து காணப்பெறும்ஒரே தேவாரத் திருத்தலம்
திருநல்லூர்த் திருத்தலம்.
அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்
“திருகண்டியூர் வீரட்டம்” என்னும் திருத்தலத்தில் மட்டுமே அமையப்பெற்றுள்ளது.
திருஞான சம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள்
திருப்பட்டீச்சரம், திருப்பூந்துருத்தி.
சிவன் சிறப்புத் தேவார தாண்டவ தேவாரத்தலங்கள் ஆறு
- மயூர தாண்டவம் – மயிலாடுதுரை
- அஞ்சிதபாத கரண தாண்டவம்- செங்காட்டங்குடி
- கடிசம தாண்டவம்- திருவக்கரை
- சதுர தாண்டவம்- திருநல்லூா்
- சுந்தரத் தாண்டவம்- கீழ்வேளூர்
- லதா விருச்சிக தாண்டவம்- திருமழபாடி
அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர்.
சம்பந்தர், நாவுக்கரசர், திருமூலர், நின்றசீர் நெடுமாறன், அப்பூதி,சோமாசிமாறர், மங்கையர்கரசி, நீலகண்டயாழ்பாணர், மிழலைக்குறும்பர்,கணநாதர், குலச்சிறை என 11 பேர் ஆவார்.
பெரிய கோபுரத் தலங்கள்
திருவண்ணாமலை
மதுரை
தில்லை
திருமுதுகுன்றம்
திருச்செந்தூர்
ராமேஸ்வரம்
குடந்தை
காளையார் கோவில்
தென்காசி
மண்டபங்கள் சிறப்பு
வேலூர் – கல்யாண மண்டபம்
கிருஷ்ணாபுரம் – சபா மண்டபம்
பேரூர் – கனக சபை
தாரமங்கலம் – குதிரை மண்டபம்
புகழ் பெற்றவை மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்குசிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.
யானை ஏறாத மாடக் கோவில்கள் சில
- திருவானைக்காவல்
- ஆக்கூர்
- திருத்தேவூர்
- திருக்கீழ்வேளூர்
- சிக்கல்
- வலிவலம்
- அம்பர்பெருத்திருக்கோயில்
- தண்டலை நீள் நெறி
- பழையாறை
- திருமருகல்
- வைகல்மாடக் கோயில்
- நன்னிலம்(மதுவனம்)
- குடவாசல்
- திருத்தலைச்சங்காடு
- நல்லூர்
- திருச்சாய்க்காடு
- ஆவூா்
20.பெருவேளூர் - சேங்கனூர் இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….
பெரிய லிங்கம்
கங்கை கொண்ட சோழபுரம் – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்கு இலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும்பரிவட்டம் வேண்டும்.
திருப்புனவாயில் – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்கவடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம்பரிவட்டமும் தேவை “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒருசுற்று ”என்பது பழமொழி.
பெரிய நந்தி
தஞ்சை நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது லேபாட்சி வீரபத்திரர் சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.
புகழ்பெற்ற கோவில்கள்
கோவில் – சிதம்பரம்
பெரியகோயில்- தஞ்சை.
பூங்கோயில் – திருவாரூர்.
ஏழிருக்கை-சாட்டியக்குடி
ஆலக்கோயில்-திருக்கச்சூர்
கரக்கோயில்- திருக்கடம்பூா்.
கொகுடிக் கோயில்- திருப்பறியலூர்
தூங்கானைமாடம்- திருப்பெண்ணாடகம்
அயவந்தீச்சரம்-திருச்சாத்தமங்கை
சித்தீச் சுரம்- திருநறையூர்
நால்வர் இறையருளில் கலந்த
தலங்கள்
- திருஞானசம்பந்தர் – ஆச்சாள் புரம்.
- திருநாவுக்கரசர் – திருப்புகலூர்.
- சுந்தரர் – திருவஞ்சைக்களம்.
- மாணிக்கவாசகர் – தில்லை.
சந்தானக்குரிவர் அவதரித்த தலங்கள்
- மெய்கண்டார்- திருப்பெண்ணாடகம்.
- அருள் நந்திதேவ நாயனார் – திருத்துறையூர்
- மறைஞானசம்பந்தர்- பெண்ணாடகம்
- உமாபதி சிவம்- சிதம்பரம்.
சந்தானக்குரவர் முக்தி அடைந்த
தலங்கள்
- மெய்கண்டார்- திருவண்ணாமலை
- அருள் நந்திதேவ நாயனார் – சிர்காழி
- மறைஞானசம்பந்தர்- சிதம்பரம்
- உமாபதி சிவம்- சிதம்பரம். பக்தர்கள் பொருட்டு 🌿🌹
திருவிரிஞ்சியுரம்- பக்தனுக்காக இறைவன் தன் முடியை சாயத்துஅபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.
திருப்பனந்தாள் – பக்தைக்காக இறைவன் தன் முடியை சாய்த்துபூமாலையை ஏற்றிக் கொண்டருளினார்.
தேவாரம் போற்றும் பெருங்கோவில்கள்
1.அம்பர் பெருந்திருக்கோயில்
2நன்னிலத்துப் பெருந்திருக்கோயில்
3கீழ்வேளூர் பெருந்திருக்கோயில்
அதிசய நடராஜர்
பத்துத் திருக்கரங்களுடன் நடராஜர் நடனம் ஆடும் காட்சி
மதுரையிலுள்ள வெள்ளியம்பலம் தவிர வேறு எங்கும் காண இயலாது.
திருக்கயிலாய பரம்பரை
சிவபெருமானிடமிருந்து நந்தி தேவர் உபதேசம் பெற்றார்.
நந்தி தேவரிடமிருந்து சணற்குமாரர் உபதேசம் பெற்றார்
சணற் குமாரரிடமிருந்து சத்ய ஞானதரிசினிகள் உபதேசம் பெற்றார்
சத்தியஞானதரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியார் உபதேசம் பெற்றார்
பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டார் உபதேசம் பெற்றார்
இப்படி வழி வழியாக உபதேசம் பெற்ற குரு பரம்பரையே திருக்கயிலாயபரம்பரை என அழைக்கப்படுகிறது.
பஞ்ச புராணம்
- தேவாரம்
- திருவாசகம்
- திருவிசைப்பா
4.திருப்பல்லாண்டு
5 பெரியபுராணம்.
கும்பமேளா தீர்த்தங்கள்
- ஹரித்துவார் – உத்தரபிரதேசம்
- அலகாபாத் – உத்தரபிரதேசம்
3.உஜ்ஜயினி – மத்தியப் பிரதேசம்
4.நாசிக் – மஹாராஷ்டிரம்
பாடல் பெற்ற
தேவார திருத்தலங்கள் – 274
காவிரிக்கு வடகரையிலுள்ளது – 63
காவிரிக்கு தென்கரையிலுள்ளது – 127
ஈழநாட்டிலுள்ளது – 2
பாண்டிநாட்டில் உள்ளது- 14
மலைநாட்டில் உள்ளது – 1
கொங்கு நாட்டில் உள்ளது – 7
நடுநாட்டில் உள்ளது- 22.
தொண்டை நாட்டில் உள்ளது – 32
துளுவ நாட்டிலுள்ளது – 1
வட நாட்டில் உள்ளது – 5
தொகுப்பு: காசி விஸ்வநாதன், திருநெல்வேலி.