கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டி ஜேசிஐ,அரவிந்த் கண் மருத்துவமனை,ஆசியா பார்ம்ஸ் நிறுவனம் ஆகியவற்றின்
சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
ஆசியாபார்ம்ஸ் நிறுவன வளாகத்தில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமிற்கு ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
பல் மருத்துவர் விஜய்,ஜேசிஐ முன்னாள் தலைவர் லட்சுமிவிக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஆசியா பார்ம்ஸ் உரிமையாளர் பாபு அனைவரையும் வரவேற்றார்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரோசரியா, கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார்.கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் வினோதினிபிரியா, 150 க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்தார்.
ஜேசிஐ நிர்வாகிகள் ராஜ்குமார், சூர்யா, ஷியாம், உதய லட்சுமி,ஸ்டீபன் நரேஷ்,தினேஷ் பாபு,பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன்,மருத்துவர்கள் பெலிக்ஸ் மரி ஆஞ்சலோ, அலாய்சியா பாபு,அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஹரணி கிருஷ்ணா, முகாம் ஒருங்கினைப்பாளர் கந்தசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆசியா பார்ம்ஸ் நிறுவன பணியாளர் மெக்சிதா நன்றி கூறினார்.
