கோவில்பட்டியில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சூசையப்பர் சொரூபம் பவனி
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தின் திருவிழா 26 4 2024 வெள்ளி கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழாவின் 9ஆம் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு திருத்தலவளாகத்தில் அமைந்துள்ள திருப்பலி பீடத்தில் புளியம்பட்டி பங்கு தந்தை மோட்சராஜன் அடிகளார்,பாளையங்கோட்டை மறைமாவட்ட பொறியாளர் ராபின் அடிகளார்,இளையரசனேந்தல் பங்குதந்தை சகாய சின்னப்பன் அடிகளார், கோவில்பட்டி உதவி பங்குதந்தை அந்தோணிராஜ் அடிகளார் இணைந்து இயேசுவின் இறைவேண்டல் எனும் மறையுறையுடன் திருப்பலி நிறைவேற்றினார்கள்.
}திருப்பலி முடிந்த உடன் திருத்தலத்திலிருந்து இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சூசையப்பரின் சொரூபம் வைக்கப்பட்டு பவனியாக சாத்தூர் மெயின்ரோடு ,மாதாங்கோவில் தெரு ,எட்டையாபுரம் ரோடு ,புதுரோடு வழியாக திருத்தலம் வந்து சேர்ந்தது இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர். பத்தாம் நாள் திருவிழாவில் இன்று காலையில் புது நன்மைவிழா நடைபெற்றது.மாலையில் ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலிருந்து நற்கருணை பவனி திருத்தலம் வந்து சேர்ந்து திருத்தலத்தில் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.